Wednesday, October 16, 2019

தேர்தல் நடவடிக்கைகளுக்கு இடைஞ்சல் விளைவிக்கவே சந்திரிக்க கடிதங்கள் அனுப்புகிறார்! வீரகுமார திசாநாயக்க

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு மேடையில் 'ஹு' சொன்னது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வீரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

அக்கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்துரைக்கும்போது,

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரத்துங்க கடிதங்கள் அனுப்புவதன் காரணம் தேர்தல் நடவடிக்கைகளை இரண்டுபடுத்தவே எனக் குறிப்பிட்டார்.

அங்கு ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட வினாவுக்கு விடையளிக்கும்போது, கோத்தபாய ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் அல்லர் எனவும், அதனால் கட்சியின் தலைமைப் பொறுப்பை அவருக்கு வழங்குவதற்கு எந்தவிதத் தீர்மானங்களும் இல்லை எனவும் குறிப்பிட்டார்.

அதேபோல, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எடுத்துள்ள தீர்மானத்திற்கு அமைய 17 ஆம் திகதி பதில் கடமையிலிருந்து நீங்கி, மீண்டும் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேனவுக்கு சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பு வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

'பொதுஜன பெரமுனவிலுள்ள ஒருசிலரைப் பணம் கொடுத்துவாங்கியே 'ஹு' போடச் செய்திருக்கிறார்கள். இது ஒரு திட்டமிட்ட சதி.’

இலட்சக் கணக்கான மக்கள் குழுமியிருந்த இடத்தில் 'ஹு' போட்டவரிடம் கமெரா ஒன்று. இது திட்டமிட்டே செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கூட்டத்தைப் பார்வையிடுவதற்காக வந்தவர்கள் சொல்கிறார்கள்.

அவ்வாறு கேவலமான விடயத்தைச் செய்பவர்களுக்கு பொதுமக்கள் தண்டனை கொடுப்பது தடுக்கவியலாத விடயம். அப்படிப்பட்டவர்களின் கை கால்களை முறிப்பதும் நடக்கின்ற செயல்தான். பிறகு அவர்கள் துதிபாடுகின்றவர்களே அவர்களுக்கு ஒத்தடம் வழங்க வேண்டும்' எனவும் அவர் குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com