Wednesday, October 16, 2019

இரண்டரை இலட்சம் வாக்குகளால் நுவரெலியாவில் சஜித்தைத் தோற்கடிப்போம்! - CWC

ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் பெருந்தோல்வியைச் சந்திப்பார் என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஹற்றனில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றைக் கூட்டி, அதில் குறிப்பிட்டுள்ளது.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் சிரேஷ்ட உப தலைவர்களான கணபதி கனகராஜ் மற்றும் பீ. சத்தியவேல் ஆகியோர் ஊடகத்தைக் கூட்டி மேலும் கூறியிருப்பதாவது,

நுவரெலியா மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்.உறுப்பினர்கள், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர்கள் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் ஒன்றிணைந்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் வாக்குகளுக்கும் மேல் பெற்றுக்கொடுப்பதற்கு ஆவன செய்துவருவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சி அரசு தோட்டத்தில் வாழும் மக்களை ஏமாற்றியதாகவும், தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்குவதாகக் கூறிய ரூபா 50 இற்கான சம்பளத்தை வழங்கவில்லை எனவும், தங்கள் கட்சியின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் இந்தி அரசுடன் பேச்சுவார்த்தை நடாத்திப் பெற்றுக்கொண்ட வீட்டுத் திட்டம் மாத்திரம் தோட்டத்து மக்களுக்காக வழங்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸினால் முன்வைக்கப்பட்ட வேண்டுகோள்கள் 32 இற்கு புதிய ஜனநாயக முன்னண மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி இரண்டினதும் ஜனாதிபதி வேட்பாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளபோதும், தோட்ட மக்களின் வேண்டுகோள் கோத்தபாய ராஜபக்ஷவே என்பதால், கட்சியின் நிறைவேற்றுக் குழு கோத்தபாய ராஜபக்ஷவை தேர்தலில் வெற்றியீட்டச் செய்வதற்குத் தீர்மானம் எடுத்துள்ளதாக ஊடகவியலாளர் சந்திப்பின்போது இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் சிரேஷ்ட உப தலைவரான கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com