Wednesday, October 9, 2019

கொத்மலையில் 7 மாணவிகளை துஷ்பிரயோகம் செய்த அதிபர் விளக்கமறியலில்

கொத்மலை கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி பயின்று வந்த 7 மாணவிகளை தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தி வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட குறித்த பாடசாலையின் அதிபரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹெல்பொட நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த சில காலமாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தபட்டு வந்ததாக குறித்த மாணவிகள் தமது பெற்றோர்களிடம் அறிவித்ததை அடுத்து அவர்கள் கொத்மலை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்திருந்தனர்.

குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபரான அதிபர் நேற்று (08) கைது செய்யப்பட்டு ஹெல்பொட நீதிவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்தபட்ட போதே எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹெல்பொட நீதிமன்ற நீதவான் சாந்தினி மீகொடவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சம்பவம் தொடர்பில் அறிந்த இலங்கை தொழிலாளர் காங்ரஸின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான், மத்திய மாகாண ஆளுனர் கீர்த்தி தென்னகோன் மற்றும் மாகாண கல்வி பணிப்பாளர் ஆகியேரை நேரடியாக சந்தித்து குறித்த அதிபருக்கு எதிராக விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் குறித்த அதிபருக்கு இடமாற்றம் வழங்குமாறும் பணிப்புரை விடுத்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com