Sunday, September 15, 2019

மாெட்டின் பிளவினைத் தீர்க்க மைத்திரி - மகிந்த சந்திப்பு!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் தாமரை மொட்டின் இரண்டிற்கும் இடையே கட்டியெழுப்பப்படவுள்ள புதிய கூட்டணியின் இலச்சினை தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் தனக்கிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாக, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ குறிப்பிடுகின்றார்.

தற்போதைய அரசியல் பற்றி றதிந்த மனதுடன் பேசிவரும் சிரேஷ்ட அரசியலாளராக ஜனாதிபதி இருப்பதனால், தற்போதைய பிரச்சினைகளுக்கு இறுதித் திர்மானம் எடுக்கவுள்ளதாக மகிந்த மேலும் குறிப்பிட்டார்.

அத்தோடு தாமரை மொட்டுமு் ஸ்ரீ.சு.க. யினிடையே கலந்துரையாடல் சிறப்பாக நடைபெற்றால், இரு தரப்புக்களுக்குமிடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்குக் கையொப்பமிடுவது ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சி, மொட்டு ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவே என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கு தற்போது எல்லோரும் உடன்பட்டுள்ளனர். அதுதொடர்பில் கோத்தபாயவுடன் தனியாகப் பேச்சுவார்த்தை நடாத்துவதற்கு, ஜனாதிபதியினால் மகிந்த அமரவீர மற்றும் லசந்த அழகியவத்த ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீ.சு.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com