Sunday, September 15, 2019

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் ஐவரின் அங்கத்துவம் இரத்து!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசியப் பட்டியலிலிருந்து பாராளுமன்றைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பாராளுமன்ற உறுப்பினர் ஐவரின் கட்சி அங்கத்துவத்தைத் இரத்துச் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுபெரமுனவின் அங்கத்துவத்தைப் பெற்றுள்ள டிலான் பெரேரா, எஸ்.பி. திசாநாயக்க, அக்கட்சிக்கு ஆதரவு அளிக்கின்ற லக்ஷ்மன் யாபா அபேவர்தன ஆகியோரின் அங்கத்துவமே இவ்வாறு இரத்துச் செய்யப்படவுள்ளது.

மேலும், ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துவருகின்ற விஜித் விஜயமுனி சொய்சா, ஏ.எச்.எம். பெளசி ஆகியோரின் கட்சி அங்கத்துவமும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. அதுதொடர்பிலா கடிதங்கள் எதிர்வரும் வாரத்திற்குள் குறித்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பப்படவுள்ளன எனவும் கட்சியின் செயலாளர் நாயகம் தயாசிரி ஜயசேக்கர குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com