Wednesday, September 4, 2019

உயிர்த்த ஞாயிறன்று நடாத்திய தேடுதலை விட கோத்தபாய பற்றிய தேடலே அதிகம்! - மகிந்த

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலைப் பற்றி ஆராய்ந்ததை விடவும் பன்மடங்கு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள, ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் பெயர் 2005 ஆம் ஆண்டு வாக்காளர் பெயர்ப்பட்டியில் உள்ளடங்கியுள்ளதாக என்பதை ஆராய்வதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளுக்குத் தேவைப்பாடாக உள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

அதுதொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து 20 இற்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஹம்பாந்தோட்டை நகருக்கு வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்:

இப்பொழுதெல்லாம் வெளிச்சத்திலேயே மக்கள் காெலை செய்யப்படுகிறார்கள். அவை பற்றி யாரும் கருத்திற் கொள்வதில்லை. குற்றங்கள் பற்றித் தேடாமல், காேத்தபாயவின் பெயர் 2005 ஆம் ஆண்டு வாக்காளர் பெயர்ப்பட்டியலில் இருக்கின்றதா என்பதைத் தேடுவதே குற்றப் புலனாய்வு உறுப்பினர்களுக்கு மிகவும் தேவைப்பாடாக உள்ளது. இந்நாட்களில் அவர்களுக்கு இருக்கின்ற பாரிய பொறுப்பு அதுதான். அதுமட்டுல்ல, அவர் வெளிநாட்டுக் கடவுச் சீட்டினை மாற்றிக்கொண்டாரா இல்லையா என்பது தொடர்பிலும் அறிக்கையொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.

கொழும்பு கண்காட்சி மற்றும் சம்மேளன மத்திய நிலையத்தில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com