Thursday, September 5, 2019

இன்று முதல் கொழும்பிலிருந்து யாழ்பாணத்திற்கு செல்கிறாள் ஸ்ரீதேவி

கொழும்பில் இருந்து வவுனியா வரை பயணித்த கடுகதி (இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்) ரயில், இன்று (05) முதல் காங்கேசந்துறைவரை “ஸ்ரீதேவி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்” ஆக தனது சேவையை ஆரம்பித்துள்ளது.

கொழும்பு,கோட்டையிலிருந்து மாலை 3.55 மணிக்கு புறப்பட்டு யாழ்ப்பாணத்தை இரவு 10.00 மணிக்கு சென்றடையும், அங்கிருந்து காங்கேசந்துறைக்கு இரவு 10.16 மணிக்கு குறித்த ரயில் சென்றடையும்.

பொல்கஹவெல, குருநாகல், மாஹோ, கல்கமுவா, தம்புத்தேகம, அநுராதபுர புதிய நகரம், அநுராதபுரம், மதவாச்சி, வவுனியா, அறிவியல் நகர், கிளிநோச்சி, கொடிகாமம், யாழ்ப்பாணம், காங்கேசந்துறை ஆகிய இடங்களில் குறித்த ரயில் நிறுத்தப்படும்.

குறித்த ரயிலானது காங்கேசந்துறையில் இருந்து அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு, யாழ்ப்பாணத்தை வந்தடைந்து,யாழ்ப்பாணத்தில் இருந்து அதிகாலை 4.05 மணிக்கு புறப்பட்டு கொழும்பு கோட்டைக்கு முற்பகல்10.24 மணிக்கு சென்றடையவுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com