ASP இற்கு எச்சரிக்கை விடுத்தார் அஸாத் ஸாலி - ஜயந்த

புத்தர் சிலையை உடைத்தமை தொடர்பிலான விசாரணைக் குழுவின் முதன்மையாளரான மேற்படி உதவிப் பொலிஸ் அத்தியட்சகருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளமை தொடர்பில் அஸாத் ஸாலி கைது செய்யப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
'மாவனல்லைச் சம்பவத்தின் முக்கிய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தால், உயிர்த்த ஞாயிறு தினத்தன்றைய நிகழ்வு நடவாமல் காத்திருக்கலாம். அவர்கள் கைதுசெய்யப்படாமைக்குக் காரணமாக இருந்தவர் அஸாத் ஸாலியே. குறைந்தளவு அவர்களிடமிருந்து ஒரு வாய்மொழி கூடப் பெறப்படவில்லை. உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதல் தொடர்பாக கருத்துரைப்பதற்காக அவரைப் பாராளுமன்றத் தேர்வுக் குழுவின் முன் அழைக்குமாறு நாங்கள், சபாநாயகரைக் கேட்டுக் கொண்டோம். என்றாலும் அவர் அழைக்கப்படவில்லை.
அஸாத் ஸாலி பற்றிய தகவல்கள் ஏன் மக்கள் மத்தியில் முன்வைக்கப்பட்டது எனக்கேட்டே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அஸாத் ஸாலியின் இந்த படுமோசமான செயலை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன். மிக விரைவாக அஸாத் ஸாலி கைது செய்யப்பட வேண்டும். அவ்வாறு செய்தால் வஹாப்வாத அடிப்படைவாதிகள் பற்றிய அனைத்து விடயங்களையும் வெளிக்கொணரலாம். அவர்கள் சென்றுள்ள இடங்கள் பற்றித் தேட வேண்டும். அவர்களுக்கும் சர்வதேசத்திற்கும் இடையிலுள்ள தொடர்புபற்றித் தேட வேண்டும். தேசியமாக அவர்கள் எங்கெல்லாம் பரந்து இருக்கின்றார்கள்? அவர்களுடைய அடுத்த இலக்கு என்ன? என்பன பற்றித் தேட வேண்டும்' எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment