Tuesday, September 3, 2019

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்ட தமிழ் இளைஞர் யுவதிகள்!

இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்திற்கு படையெடுத்து கிளிநொச்சி முல்லைத்தீவு இளைஞர்கள் யுவதிகள் வேலை வாய்ப்பினை பெற்றுக்கொள்வதற்காக பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.தமிழ் அரசியல் பிரதிநிதிகளின் கையாலாகதனத்தால் வேலையற்றவர்களின் எண்ணிக்கை வடக்கில் நாளாந்தம் அதிகரித்து செல்கிறது.

வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பினை பெற்றுக்கொடுப்பதற்கு தமிழ் மக்களின் பிரதிநிதிகள் எவ்வித நடவடிக்கையினையும் மேற்கொள்ளவில்லை எனவும் மாறாக அவர்கள் தங்களின் பிள்ளைகளுக்கு மத்திய வங்கியிலும், வெளிநாட்டு தூதரகங்களிலும் வேலைவாய்ப்பினை பெற்றுக்கொடுத்துள்ளனர் எனவும் தொழிற்சந்தையில் கலந்துகொண்டவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி,முல்லைத்தீவு மாவட்டங்களில் காணப்படும் தொழிலின்மை நிலையினை கருத்தில் எடுத்து இரண்டு மாவட்டங்களுக்குமான தொழிற்சந்தை ஒன்று இன்று(03-09-2019) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.

இன்று காலை ஒன்பது மணி முதல் பிற்பகல் இரண்டு மணி வரை இந் நிகழ்வு இடம்பெற்றது. மனித வலு வேலைவாய்ப்புத் திணைக்களம்,கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட செயலகங்கள் பிரதேச செயலகங்கள் இணைந்து இத் தொழிற் சந்தையினை நடாத்தியிருந்தனர்.

கிளிநொச்சி முல்லைத் தீவு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் கலந்துகொண்டிருந்தனர். இதில் 40 க்கு மேற்பட்ட நிறுவனங்களும் பங்குபற்றியிருந்தன.

இலங்கையில் வறுமையில் கிளிநொச்சி மாவட்டம் முதலிடத்திலும், முல்லைத்தீவு மாவட்டம் இரண்டாம் இடத்திலு் காணப்படுகின்றன. இவ்விரு இரண்டு மாவட்டங்களிலும் வேலையில்லாப் பிரச்சினை அதிகளவில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com