Tuesday, September 3, 2019

கிளிநொச்சியில் கடும் வறட்சி 34785 ஆயிரம் போ் பாதிப்பு, பயன்தரு மரங்கள் அழிவு

கிளிநொச்சியில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக பொது மக்கள் குடி நீர் தேவையை உள்ளிட்ட நீர்த் தேவையினை பூர்த்தி செய்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதோடு, பயன்தரும் மரங்களும் அழிவடைந்து வருகின்றன மாவட்டத்தில் 9933 குடும்பங்களைச் சேர்ந்த 34785 பேர் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

இதன்படி கண்டாவளை பிரதேசத்தில் 666 குடும்பங்களைச் சேர்ந்த 2533 பேரும், கரைச்சியில் 4145 குடும்பங்களைச் சேர்ந்த 14780 பேரும், பூநகரியில் 4185 குடும்பங்களைச் சேர்ந்த 14634 பேரும், பளையில் 937 குடும்பங்களைச் சேர்ந்த 2838 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

அத்தோடு கால்நடைகளும் குடிநீரின்றி அலைவதனையும், பயன்தரு மரங்கள் நூற்றுக்கணக்கில் அழிவடைந்தும் காணக்கூடியதாக உள்ளது. கிளிநொச்சி மலையாளபுரத்தில் தனியார் காணி ஒன்றில் காய்க்கும் பருவத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட தென்னைகள் வட்டுகள் சரிந்து வீழ்ந்துள்ளன. தங்களின் இந்த நிலைமையினை இதுவரை எந்த அதிகாரிகளும் வந்த பார்வையிடவி்லலை என காணி உரிமையாளர் கவலை தெரிவித்துள்ளார்.

இவ்வாறு மாவட்டத்தின் பல இடங்களில் தென்னைகள் உள்ளிட்ட மரங்கள் வறட்சியால் அழிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. எனவே வருகின்ற சில மாதங்களுக்கு இந்த வறட்சியை எதிர்கொள்கின்ற அளவுக்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் பொது மக்கள் அதிகாரிகளிடம் கோரியுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com