Friday, September 6, 2019

கோத்தாவுடன் ஸ்ரீ ல சு க இருமணி நேரப் பேச்சு! நாம் பலமான கூட்டணி ஒன்றை அமைப்போம். டலஸ் உறுதி.

இன்று பிற்பகல் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினருக்கும் பொதுஜன பெரமுனவிற்குமிடையே 8 வது சுற்றுப்பேச்சு இடம்பெற்றது. இப்பேச்சுவார்த்தையின்போது முதல்தடவையாக பொது ஜனபெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச கலந்து கொண்டிருந்தார். இதன்போது கூட்டணி அமைக்கப்படுவதானால் கோத்தாவிற்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குமிடையேயான ஒப்பந்தம் தொடர்பில் இரு மணிநேரம் பேசப்பட்டுள்ளது.

இச்சந்திப்பு முடிவில் கருத்து தெரிவித்த கோத்தாவின் தேர்தல் விவகாரங்களுக்கான பேச்சாளர்களில் ஒருவரான டலஸ் அழகப்பெரும, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தனித்து போட்டியிடாது என்றும் தாம் ஒரு பலமான கூட்டணி அமைப்போம் என்றும் உறுதி உறுதியாக தெரிவித்துள்ளார். அத்துடன் இன்று தம்மிடயே இருக்கின்ற பிரச்சினைகளுக்கு முன்னால் ஐக்கிய தேசியக் கட்சியை தோற்கடிப்பது பிரதானமானது எனத் தெரிவித்துள்ள அவர், ஐக்கிய தேசியக் கட்சியை தோற்கடிக்கவேண்டும் எனக் கருதுகின்ற யாவரும் தம்முடன் இணைய வேண்டும் எனவும் வேண்டுதல் விடுத்துள்ளார்.

அதேநேரம் சிறிலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் கலந்து கொண்டிருந்த அக்கட்சியின் முக்கியஸ்தர்களில் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், இணைவதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுவதாகவும் ஆனாலும் நிறைய விடயங்களில் இணக்கங்கள் எற்படவேண்டியுள்ளதால் தொடர்ந்தும் பேசவுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com