Friday, September 6, 2019

"ஆரோக்கியமான முதுமை "எனும் தொனிப்பொருளில் வைத்திய முகாம்.

"ஆரோக்கியமான முதுமை "எனும் தொனிப்பொருளில் முதியோருக்கான தேசிய செயலகத்தின் அனுசரணையில் கல்முனை பிரதேச செயலகம் மற்றும் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய பணிமனை இணைந்து நடாத்திய இலவச மருத்துவ முகாம் கல்முனை கடற்கரை வீதியில் உள்ள மீனவர் சங்க கட்டிடத்தில் இன்று 06.9.2019 இடம்பெற்றது.

இதில் சுமார் 60க்கு மேற்ப்பட்ட முதியோர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர் இதில் குறிப்பாக இலவச சீனி பரிசீலனை, கொலஸ்திரோல் , உயர்குருதி அமுக்கம் , தொற்றாநோய், பல் வைத்தியம் போன்ற நோய்கான பரிசீலனை இடம்பெற்றது

கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எச்.எம். ரிஸ்பின் மற்றும் முதியோர் மேம்பாட்டு உத்தியோகத்தர் அ.மதுசூதனன் மற்றும் சுகாதார வைத்திய பணிமனை பணியாளர்கள் கல்முனை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

(எஸ்.அஷ்ரப்கான்).


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com