ஸஹ்ரான் பற்றிய இரகசிய தகவல்கள் சர்வதேசத்திலிருந்து இலங்கைக்கு....!
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiF7adWYSlb1I7yhkQSRe4q17-QVaI5gNT7Z6AJ1eLPhZ-Rvk1AUCCnUES0bMl1kiMJuRcUKfyV60wn4bFt5BkE7nZaSUWd4fX3tgwXamh5XeJra-PhBvHLx4yc-LFmtTBiLAVvW6icDec/s200/saharan-1.jpg)
அமெரிக்க எµa. பீ. ஐ. பொலிஸ் கைத்தொலைபேசி சிடிசன் ஆய்வு முறைமையின் கீழ், ஆய்வு நடாத்துகையில் தேசிய தெளஹீத் ஜமாஅத்தின் தலைவர் ஸஹ்ரான்தொடர்புபட்டிருந்தோர் பற்றிய தகவல்களும், கணினி உபகரணங்களில் அழித்துவிட்டிருந்த தகவல்களும் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. இந்தத் தொழிநுட்ப வசதிகள் இலங்கை பாதுகாப்புப் படையினரிடமோ பொலிஸாரிடமோ இல்லை.
அமெரிக்க எµa. பீ. ஐ. பொலிஸ் விசாரணைக் குழுவொன்றின் மூலம் கைதுசெய்யப்பட்டுள்ள அடிப்படைவாத ஜமாஅத் செயற்பாட்டாளர்களின் தகவல்களும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறன்று தாக்குதல் நடாத்துவதற்கு முன்னர், தெளஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்த செயற்பாட்டாளர்களிற் சிலரிடமிருந்த கைத்தொலைபேசிகளிலும் கணினிகளிலும் இருந்த தகவல்கள் கணினித் தொழில்நுட்ப வல்லுநர் ஒருவரினால் அழிக்கப்பட்டுள்ளன எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் தொழில்நுட்ப வல்லுநர் இதுவரை அகப்படவில்லை.
மேலும் சர்வதேச பொலிஸாரிடம், வெளிநாடுகளில் உள்ள 50000 பயங்கரவாதிகளின் தகவல்கள் உள்ளடங்கிய தகவல் களஞ்சியத்தினுள் பொலிஸார் உள்நுழைவதற்கான அனுமதியையும் வழங்கியுள்ளது.
0 comments :
Post a Comment