Thursday, September 26, 2019

திருமலையில் இரண்டு சிலைகள் உடைப்பு... கிழக்கு அடிப்படைவாதிகளின் செயல் எனச் சந்தேகம்!

திருகோணமலை - அபயராம விகாரையைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள சிலைகள் இரண்டு சேதமாக்கப்பட்டுள்ளதாகவும், அதுதொடர்பில் விசாரணைகள் நடாத்தப்பட்டு வருவதாகவும் உப்புவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

அந்த விகாரையின் விகாராதிபதி மானிங்கமுவே விமலஜோதிஸ்ஸ தேரரின் முறைப்பாட்டின் பேரிலேயே விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

விகாரையின் சைத்தியத்தைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ளபுத்த சிலைகளின் தலைகள் உடைக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பில் கருத்துத்தெரிவித்த பலகல விகாராதிபதி, நேற்று இடம்பெற்ற மத அநுட்டானமொன்றிற்காக வெளியே சென்றிருந்தவேளையில், காலைவேளை விகாரைக்கு வழிபாட்டிற்காக வருகைதந்திருந்த அம்மையார் ஒருவர் தனக்கு தொலைபேசி அழைப்பின் மூலம் இதுதொடர்பில் தெரிவித்ததாகவும், அதன்பின்னர் உடனடியாகத் தான் அங்குவந்து அதனைப் பார்வையிட்டதாகவும் குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com