Thursday, September 26, 2019

இனி ஒருபாேதும் பயங்கரவாதமும் அடிப்படைவாதமும் இலங்கையில் தலைதுாக்க இடமளியேன்! - கோத்தா

மற்றுமொருமுறை பயங்கரவாதம் அல்லது அடிப்படைவாதம் நாட்டில் ஏற்படுவதற்கு தான் ஒருபோதும் இடமளிக்க மாட்டேன்.

பயங்கரவாதத்திலிருந்து நாட்டைப் பாதுகாத்துள்ளோம். மீண்டும் ஒருபோதும் அவ்வாறு பயங்கரவாதம் தலைதுாக்கதிருக்க நாம் ஆவன செய்ய வேண்டும். "இராணுவ வீரர்கள் என்றும் இராணுவ வீரர்கள்தான்" என்றுகூறி, அவர்களைப் பாதுகாப்பேன் என்று இன்று இடம்பெற்ற இராணுவ வீரர்களின் குடும்ப அமைப்பு ஒன்றுகூடலின்போது உறுதியளித்துள்ளேன் என ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

இராணுவ வீரர்கள் பெரும்பாலானோர் கலந்துகொண்ட இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்ஷ மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com