Tuesday, September 17, 2019

நாடு பிளவுபடாமல் காப்பது 13 ஆவது திருத்தச் சட்டமே!

13 ஆவது திருத்தத்தை இரத்துச் செய்யாமல் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட்டால் நாடு கடுமையான நெருக்கடிக்கு முகங்கொடுக்க வேண்டியிருக்கும் என பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸா தேரர் குறிப்பிட்டார்.

நவீன பத்துச் சட்டங்கள் குறித்த பொது ஆணையத்தின் அறிக்கையை வெளியிடுவதில் பங்கேற்றபோதே தேரர் இவ்வாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், 13 ஆவது திருத்தத்தின் சில பிரிவுகள் நாடு பிளவுபடுவதைத் தடுத்துள்ளது என்றும், மேற்கத்தேய ஆட்சியாளர்களின் செயற்பாடுகளில் தொடர்பில் மிகக் கவனமாகச் செயலாற்ற வேண்டும் எனவும் அவர் தெளிவுபடுத்தினார்.

தேசிய பிக்கு சங்கத்தின் பொது ஆலோசனையைத் தொடர்ந்து பொது மக்களின் கருத்துக்களை முன்வைப்பதற்காக இடம்கொடுத்துவிட்டுப் பின்னர், புதிய பத்துச் சட்டங்களை செயல்திறன் ஆணையக அறிக்கை இன்று வெளியிட்டது.

மகா சங்கத்தினரின் ஆதரவின் கீழ் இந்நிகழ்வு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெற்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com