Monday, September 16, 2019

உண்ணாவிரதப் போராட்டம் நடாத்துகிறான் கஞ்சிப்பான இம்ரான்!

பூசா சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பாதாள உலக கோஷ்டியின் முக்கிய நபர் கஞ்சிப்பான இம்ரான், தனது தந்தை மற்றும் சகோதரன் கைதுசெய்யப்பட்டமை தொடர்பில் எதிர்ப்புத் தெரிவித்து உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பித்துள்ளான்.

சிறைச்சாலை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தி, அவர்களை விடுதலை செய்யும்வரை தான் உண்ணாவிரதம் இருக்கப் போவதாகத் தெரிவித்ததாக சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இம்ரானுக்கு உணவு எடுத்துச்சென்ற பிளாஸ்ரிக் வாளியில் மறைவாக வைக்கப்பட்டிருந்த தொலைபேசிகள் குறித்து, குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தனியாக விசாரணை ஆரம்பித்துள்ளது.

குறித்த வாளிக்குள் மறைவிடம் ஒன்றைத் தயாரித்த தாெழிற்சாலை குறித்தும் பொலிஸார் தேடிவருகின்றனர். இலகுவில் கண்டுபிடிக்க இயலாதவகையில் இந்தத் தொலைபேசிகளும், 'சார்ஜர்'களும் வைக்கப்பட்டிருந்தன எனத் தெரியவருகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com