Wednesday, August 7, 2019

இந்நாட்டின் முக்கிய தீர்வுகளை மாடுகளே எடுக்கின்றன! புத்திக பதிரண

'சுதந்திர இலங்கையில் தொழில்துறை இன்றுவரை எவ்விதக் கொள்கையுமின்றியே இருக்கின்றது' என கைத்தொழில் மற்றும் வர்த்தக பிரதி அமைச்சர் புத்திக பதிரண குறிப்பிடுகின்றார்.  அததெரண தொலைக்காட்சியில் இடம்பெறும் 360 எனும் நேரடி நிகழ்ச்சியில் பங்கேற்கும்போதே அமைச்சர் இவ்வாறு கருத்துத் தெரிவித்தார்.

பொன்னம்பலம் அவர்கள் அன்று தொழில்துறை அமைச்சராக இருந்த காலத்திலிருந்து இன்று வரை தொழில் துறையில் எந்தவொரு கொள்கையுமின்றியே இருக்கின்றது என அமைச்சர் புத்திக பதிரண குறிப்பிட்டார்.

தற்போது உள்நாட்டு வர்த்தகக் கொள்கை மற்றும் மூன்றாம் நிலைக் கல்விக் கொள்கை தற்போது செயற்பட்டு வருகின்றது எனக் குறிப்பிட்ட அவர், சில சமயங்களில் கம்பனிகளுக்குத் தலைசாய்கின்ற நிலைமையும் இதற்குக் காரணமாக இருக்கின்றது எனக் குறிப்பிட்டார்.

இந்நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள சில பசுமாடுகளை வளர்ப்பதற்கு குளிரூட்டப்பட்ட அறைகள் தேவைப்படுகின்றன என்றும்; அவ்வாறான தீர்மானங்களை எடுக்கின்றவர்கள் எருமை மாடுகளாக மாறுவதே பிரச்சினை என்றும் அவர் தெரிவித்தார்.

இதனால்தான் அரசியல்வாதிகளை எதிர்க்கின்ற நாடாக இலங்கை மாறியுள்ளது என்று குறிப்பிட்ட அமைச்சர், நாட்டின் எதிர்காலம் கழுதைகளுக்கும் கள்வர்களுக்கும் ஒப்படைக்கப்படுகின்றது எனவும், 71 ஆண்டுகளாக இந்த சோக நிகழ்வே அரங்கேறி வருவதாகவும் மேலும் குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com