Saturday, August 24, 2019

'நான் ஜனாதிபதி வேட்பாளராவதை யாராலும் தடுக்க முடியாது' - கோத்தபாய

தனது அமெரிக்கக் குடியுரிமையை இரத்துச் செய்துள்ளதனால், ஜனாதிபதி வேட்பாளராவதற்கு எவ்விதத் தடைகளும் இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.

சென்ற ஏப்ரல் 17 ஆம் திகதியிலிருந்து அமெரிக்கக் குடியுரிமையை நீக்கிக்கொண்டதாகவும், தற்போதைக்கு குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்திற்குத் தெளிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், அதற்கமைய இரட்டைப் பிரசாவுரிமையாகக் குறிப்பிடப்பட்டு வழங்கப்பட்டிருந்த கடவுச்சீட்டுக்குப் பதிலாக புதியதொரு கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

என்றாலும் இன்னும் தனது குடியுரிமை தொடர்பில் பல்வேறு பொய்யான கருத்துக்கள் நிலவுவதாகவும், சிலர் அதுதொடர்பின் நீதிமன்று வரை நடவடிக்கை எடுக்க முயல்வதாகத் தெரியவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

பத்தரமுல்ல நெலும்மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தில் இடம்பெற்ற உள்ளுாராட்சி மன்றங்களின் தலைவர்கள் ஒன்றுகூடிய கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய இவ்வாறு தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பெசில் ராஜபக்ஷ, ரோஹித அபேவர்தன, மகிந்தானந்த அலுத்கமகே மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com