Thursday, August 22, 2019

மைத்திரி - மகிந்த இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை இவ்வாரத்திற்குள்...

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ இருவருக்குமிடையிலான இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை இவ்வாரம் இடம்பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன என பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும குறிப்பிட்டார்.

கொழும்பு - எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட எதிர்க்கட்சிக் கூட்டணியைப் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய அனைத்து அரசியல் கட்சிகளும், ஏனைய அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து புதியதொரு கூட்டணியை உருவாக்குவது தொடர்பில் நேற்று முன்தினம் கட்சித் தலைமைக் கூட்டத்தில் ஒருமைப்பாட்டுக்கு வந்துள்ளதாகவும் பா.உ கூறினார்.

ஜனாதிபதித் தேர்தலுக்காக வேட்புமனு வெளியாவதற்கு முன்னர் புதிய கூட்டணி உருவாக்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com