Thursday, August 22, 2019

டக்ளஸ் , கருணா வழியில் புலித்தளபதி எழிலனின் மனைவி அனந்தியும் சிறிலங்கா சுதந்திக்கட்சியில் இணைந்தார்.

புலிகளின் தளபதியின் மனைவி என்ற முகத்துடன் அரசியலுக்கு நுழைந்தவர் அனந்தி சசிதரன். இவர் இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக்குற்றங்கள் தொடர்பில் பெருமளவில் பேசியவர். அத்துடன் மேற்படி குற்றங்களுக்காக சிறிலங்கா சுதந்திரக் கட்சியினை தொடர்சியாக விமர்சித்து வந்துடன் அக்கட்சியுடன் கூட்டுவைத்திருந்த டக்ளஸ் தேவானந்தா மற்றும் கருணா போன்றோரை துரோகிகள் என குறிப்பிட்டு வந்தவர்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சி இனவழிப்பு மேற்கொண்ட கட்சியென்றும் அதனுடன் இணைந்து செயற்படுபவர்கள் துரோகிகள் என்றும் குறிப்பிட்டுவந்த புலித் தளபதியின் மனைவி அனந்தி சசிதரன் இன்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்படப்போவதாக அறிவித்துள்ளார்.

தனது இந்த முடிவை அவர் இன்று யாழ்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அறிவித்துள்ளார்.

இதன்போது எதிர்வரும் காலங்களில் அவர் மலையக மக்களின் பிரச்சினைகளை ஜெனிவாவிற்கு எடுத்துச் செல்லவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அனந்தி சசிதரன் சிறிலங்கா சுதந்திரக் கட்சியினதும் இலங்கை புலனாய்வு பிரிவினதும் நிகழ்ச்சி நிரலின்கீழ் செயற்படுகின்றார் என இலங்கைநெட் தொடர்சியாக வெளியிட்டுவந்த சந்தேகங்கள் தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

முன்னாள் புலிகள் என்ற நாமத்துடன் அரசியலில் ஈடுபட்டுவரும் அனைத்து தரப்புக்களும் கொழும்பைத் தளமாகவும் பெரும்பாண்மையினத்தை தலைமைத்துவமாகவும் கொண்ட கட்சிகளது தேவைகளுக்கேற்றவாறே செயற்படுகின்றனர் என்பதும் இங்கு சுட்டிக்காட்டவேண்டியதாகும்.

அத்துடன் எதிர்வரும் காலங்களில் விக்கினேஸ்வரனும் இவ்வாறானதோர் அறிவிப்பை விடுப்பார் என இலங்கைநெட் அறிகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com