Thursday, August 22, 2019

வாக்காளர் அல்லாத காலத்தில் வாக்களித்த கோத்தாவுக்கு எதிராக தேர்தல்கள் திணைக்களத்தில் முறைப்பாடு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ அவர்கள் இலங்கைப் பிரஜை அல்லாத நிலையில் வாக்காளர் பெயர்ப்பட்டியலில் பதியப்பட்டுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டி, தேர்தல்கள் திணைக்களத்திற்கு முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் திணைக்களத்தில் உள்ளகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கைப் பிரஜை அல்லாமல் ஹம்பாந்தோட்டை மாவட்ட முல்கிரிகலப் பிரிவில் 2005 ஆம் ஆண்டின் வாக்காளர் பெயர்ப்பட்டியலில் பதியப்பட்டுள்ளமை தொடர்பாகவும், 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது அவர் வாக்கினைப் பயன்படுத்துவதற்கு உரிமை வழங்கப்பட்டுள்ளமை பற்றியும் ஊடகவியலாளர் லசந்த ருஹுனவினாவினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அரசாங்கத்திற்குச் சொந்தமான 'ஸண்டே ஒப்ஸவர்' பத்திரிகை இதுதொடர்பாக வெளியிட்ட கட்டுரைக்கு, கோத்தபாயவின் பெயர் குறிப்பிடப்பட்ட 2005 ஆம் ஆண்டு முல்கிரிகல - மெதமுலானப் பிரிவின் வாக்காளர் இடாப்பின் ஒரு பகுதியும் இணைக்கப்பட்டிருந்தது. 2003 ஆம் ஆண்டு அமெரிக்கப் பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொண்டுள்ள கோத்தபாய ராஜபக்ஷ, இரட்டைப் பிரஜாவுரிமையை 2005 ஆம் ஆண்டின் பின்னர்தான் பெற்றுக்கொண்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com