Wednesday, August 28, 2019

மட்டகளப்பில் தீவிரவாதியின் உடலை தமிழரின் மயானத்தில் புதைத்ததால் பதற்றம்

தமிழ் மக்களது மயான பூமியில் தீவிரவாதி அமைப்பை சேர்ந்த தற்கொலை தீவிரவாதி ஒருவரை புதைப்பதை மட்டகளப்பு பிரதேசத்தில் வாழும் தமிழர் மாத்திரமின்றி இலங்கையில் வாழும் அனைத்து தமிழர்களினாலும் ஏற்றுக்கொள்ள முடியாதவொரு சம்பவமாகும்.

கடந்த ஏப்ரல் 21 ஈஸ்டர் தினத்தன்று நடைபெற்ற சம்பவமானது அனைவரது மத்தியல் பாரிய மனத்தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. தீவிரவாதி அமைப்பை சேர்ந்த தீவிரவாதியான முகமது அசாத்தின் தலை உள்ளிட்ட உடல் பாகங்களை தமிழர்களின் மயான பூமியில் அடக்கம் செய்யப்படமை எல்லா தமிழர்கள் மத்தியிலும் வேதனையளித்துள்ளது.

மேலும் தமிழர்களின் இந்ந இந்து மயான பூமியானது அவர்களது உறவினர்களது தகனம் மற்றும் ஈமக்கிரியைகள் போன்ற சடங்குகள் செய்வதற்கு பயன்பட்டுவந்ததுடன் தமிழர்களின் வாழ்நாளில் மறக்க முடியாத இடமாகவும் இம் மயான பூமி காணப்பட்டது, இருப்பினும் தமிழர்களின் பாரம்பறிய வழிமுறைகளை மாற்றி இம் மயானத்தில்; தற்போது தீவிரவாதி ஒருவரின் உடலை அடக்கம் செய்தமையானது தமிழர்களின் பாரம்பரியத்தை கொச்சைப்படுத்தும் செயலாக காணப்படுகின்றது.

மேலும் தீவிரவாதியின் உடலை இவ் இடத்தில் அடக்கம் செய்தமை கவலைக்கிடமான ஒரு விடயமாகும் என்பதுடன் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய இச் சம்பவம் இடம்பெற்றிருந்தாலும் அரச தரப்பு வழக்கறிஞ்சரும் , பொலிஸாரும் தெளிவுப்படுத்தாமல் அமைத்தி காத்ததே இச் சம்பவத்திற்கு முழு காரணமாகும் . அத்துடன் அரச தரப்பு வழக்கறிஞ்சர்;, பொலிஸார் போன்றோரது அலச்சிய போக்கை வன்மையாக நாம் கண்டிக்கின்றோம்.

எனவே இப்பிரதேசத்தில் உள்ள தமிழ் அரசியல் வாதிகள் உடனடியாக உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து புதைக்கப்பட்ட உடல் பாகங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என அமைச்சர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளதுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் உட்பட அனைத்து இ.தொ.கா உறுப்பினர்களும் தமிழர் பாரம்பரிய செயற்பாடுகள் அழிவதற்கு ஒருபோதும் துனைபோக மாட்டோம் என அமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com