Tuesday, August 20, 2019

றிசார்ட்டின் வீட்டில் உயிர்த்த ஞாயிறுத்தாக்குதலுக்கான ஆயுதங்களை தேடிச் சோதனை.

ரிஷாட் பதியுதீனுக்கு சொந்தமான புத்தளம், வில்அடி பிரதேசத்திலுள்ள வீட்டில் பொலிஸ் அதிரடிப்படையினரால் விசேட சோதனை நடத்தப்பட்டுள்ளது.

ஈஸ்ரர் ஞாயிறு தினத்தன்று நடாத்தப்பட்ட தாக்குதலுடன் சம்பந்தமுடைய ஆயுதங்கள் ரிஷாட் பதியுதீன் வீட்டில் இருப்பதாக பொலிஸ் தலையைகத்தில்; நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்கவினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரமே குறித்த சோதனை இடம்பெற்றுள்ளது. மேற்படி வீட்டினை சோதனை செய்வதற்கான அனுமதியை புத்தளம் நீதிமன்றில் பெற்றுக்கொண்ட நிதி மோசடிப்பிரிவின் அதிகாரிகள் விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.


குறித்த சோதனையை நேற்று (திங்கட்கிழமை) நடத்தியுள்ளதாகவும் இந்த சோதனையின்போது எந்த சந்தேகத்திற்கிடமான பொருட்களும் மீட்கப்படவில்லை எனவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com