Tuesday, August 20, 2019

ஐக்கிய தேசியக் கட்சியின்பிரதமர் நாற்காலிக்காவும் மோதல்...

19 ஆவது திருத்தத்துடன் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படவுள்ள ஜனாதிபதி வேட்பாளர் பலமற்றவர் என்பதால், பிரதமர் ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு மூத்த வேட்பாளருக்கு வழங்கப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சிக்குள் உட்பூசல் உருவாகி வருகிறது.

இந்த விடயம் தொடர்பாகவும் ஜனாதிபதி வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பது தொடர்பாகவும் கலந்தாலோசிக்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாளை (21) கட்சி சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து ஜனாதிபதி வேட்பாளராக சஜித் தெரிவுசெய்யப்பட வேண்டும் எனக்கூறுகின்ற கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களான கபீர் ஹாஷிம், மாலிக் சமரவிக்கிரம மற்றும் மங்கள சமரவீர ஆகியோருக்குக்கும் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

இதற்கிடையில், ஜனாதிபதி தேர்தலுக்கான ஜனாதிபதி வேட்பாளரின் பரிந்துரையை விரைவுபடுத்தக் கோரி 52 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு வழங்கியுள்ள கடிதம் தொடர்பில் ரணில் விக்ரமசிங்க விசாரித்துள்ளார். அதற்குப் பதிலளித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று நாட்டில் பல்வேறு கதைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாகவும், அதற்காக உடனடியாக ஜனாதிபதி வேட்பாளர் பற்றி அறிவிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தக் கடிதத்தில் 10 பேர் மட்டுமே கைச்சாத்திட்டுள்ளதாக, சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு நல்குகின்ற சமூக வலைத்தளமொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தக் கடிதத்தில் கைச்சாத்திடாதவர்களாக பின்வருவோர் சுட்டிக்காட்டப்பட்டுள்ளனர்.

அகிலா விராஜ் கரியவாசம்
நவின் திசாநாயக்க
ரவி கருணநாயக்க
வஜிரா அபேவர்தன
ஜோன் அமரதுங்க
திலக் மரப்பன
சாகல ரத்நாயக்க
சரத் ​​பொன்சேக்க
டி.எம். சுவாமிநாதன்
ஸ்ரீனால் த மெல்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com