Saturday, July 27, 2019

சஹ்ரான் இரண்டு வருடங்களுக்கு மேலாக எமக்கு தண்ணி காட்டினார். எங்களால் முடியாமலே போனது. பயங்கரவாத தடுப்பு பிரிவு

சஹ்­ரானை கைது­செய்ய பல்­வேறு முயற்­சி­களை எடுத்தோம். அவர் பயன்­ப­டுத்­திய தொலை­பேசி இலக்கம் முதற்­கொண்டு சகல விதத்­திலும் தேடினோம். முகப்­புத்­தக கணக்­கினை முடுக்கி அதன் மூல­மாகக் கண்­ட­றி­யவும் முயற்சி எடுத்தோம். சஹ்ரான் எங்கு இருந்தார் என்­பதைக் கண்­ட­றிய முடி­யா­ம­லேயே போய்­விட்­ட­தென பயங்­க­ர­வாத தடுப்புப் பிரிவின் பொலிஸ் பொறுப்­ப­தி­காரி தரங்க பத்­தி­ரண பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­குழு முன்­னி­லையில் வழங்­கிய சாட்­சி­யத்தின் போது தெரி­வித்தார்.

ஈஸ்டர் தாக்­குதல் குறித்து விசா­ரணை நடத்த நிய­மிக்­கப்­பட்ட பாரா­ளு­மன்ற விசேட தெரி­வுக்­குழு முன்­னி­லையில் நேற்று முன்­தினம் புதன்­கி­ழமை சாட்­சி­ய­ம­ளிக்க வந்­த­போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார். அவர் மேலும் கூறு­கையில்,

சஹ்ரான் என்ற நபர் முகப்­புத்­த­கத்தின் ஊடா­கவே பிர­சா­ரத்தை முன்­கொண்டு சென்றார். 2017ஆம் ஆண்டு ஆரம்­பத்தில் இவ­ரு­டைய இந்த செயற்­பாடு தொடர்பில் அறிந்­து­கொண்டோம். அவ­ரு­டைய சகல செயற்­பா­டு­க­ளையும் நாம் பின்­தொ­டர்ந்து வந்தோம். ஒவ்­வொரு இரண்டு வாரத்­துக்கும் ஒரு­த­டவை தனது முகப்­புத்­த­கத்தில் வீடி­யோவை தர­வேற்­றுவார்.

அனைத்து வீடி­யோவும் ஜன­நா­ய­கத்­துக்கு எதி­ராக இருந்­தது. எமது பிரச்­சி­னையை நாமே தீர்க்­க­வேண்டும், சக­ல­வற்­றையும் பேச்­சு­வார்த்தை மூலம் தீர்க்க முடி­யாது. போராட வேண்டும். மத்­திய கிழக்கு நாடு­களில் உத­வியை நாடத்­தே­வை­யில்லை. எமது பிரச்­சி­னையை தீர்க்க வேண்டும் எனக் கூறி­வ­ருவார். அவ­ரு­டைய வீடி­யோக்­க­ளுக்கு பலர் லைக் போடத் தொடங்­கினர். ஒவ்­வொரு வீடி­யோக்­க­ளையும் நாம் உன்­னிப்­ப­ாக அவ­தா­னிக்கத் தொடங்­கினோம். இந்த வீடி­யோவின் சிங்­கள மொழி­பெ­யர்ப்­புக்கள் அடங்­கிய அறிக்­கை­யொன்றை 2017ஆம் ஆண்டு ஜூன் 7ஆம் திகதி சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­துக்கு அனுப்­பி­வைத்தோம்.

2017ஆம் ஆண்டு காத்­தான்­கு­டியில் இரண்டு குழுக்­க­ளுக்­கி­டையில் மோதல் ஏற்­ப­டு­கி­றது. இதுவே முதன் முறை­யாக சஹ்­ரானின் மோதல் புலப்­ப­டு­கி­றது. இதில் சஹ்­ரானும் அவ­ரு­டைய இரண்­டா­வது சகோ­த­ரரும் தப்பிச் செல்­கின்­றனர். இச்­சம்­ப­வத்தின் பின்னர் சஹ்ரான் தொடர்பில் எந்­த­வி­த­மான மோதல்­களும் முறைப்­பாடு செய்­யப்­ப­ட­வில்லை. இத­னுடன் அவர் ஒளித்­துக்­கொண்டார். அன்­றி­லி­ருந்து 2019ஆம் ஆண்­டு­வரை அவரைத் தேடி விசா­ரணைக் குழுக்­களை தொடர்ச்­சி­யாக அனுப்­பினோம். கல்­முனை பிர­தே­சத்தில் எமது உப­பி­ரி­வொன்று உள்­ளது. சஹ்ரான் பற்றி தொடர்ச்­சி­யாகக் கண்­கா­ணிப்­ப­தற்­காக முஸ்லிம் அதி­காரி ஒரு­வரை நிய­மித்தோம்.

இவரைத் தேடி­வ­ரும்­போதும் சஹ்ரான் இருக்கும் இடத்தை பிடிப்­ப­தற்­காக பல்­வேறு முறை­களை பயன்­ப­டுத்­தினோம். அவ­ரு­டைய தொலை­பேசி இலக்­கங்­களை கண்­டு­பி­டித்து அவற்றை ஆராய்ந்­த­போதும் அவரை கண்­டு­பி­டிக்க முடி­ய­வில்லை. இதன் பின்னர் முகப்­புத்­தக நிறு­வ­னத்­துடன் தொடர்­பு­கொள்ளத் தீர்­மா­னித்தோம். எஸ்.எல்.சேட் நிறு­வ­னத்தின் உத­வி­யுடன் இவ­ரு­டைய முகப்­புத்­தக கணக்கை கண்­கா­ணித்தோம். இவ­ரு­டைய கணக்கை முடக்­கு­வ­தாயின் அவ­ருக்கு எதி­ராக பிடி­யாணை இருக்க வேண்டும் எனக் கூறி­னார்கள். இதற்­காக கொழும்பு மஜிஸ்­திரேட் நீதி­மன்­றத்தில் 2017ஆம் ஆண்டு பிடி­யாணை பெற்றுக் கொண்டோம். 2018ஆம் ஆண்டு ஜுன் 12ஆம் திகதி சட்­டமா அதி­ப­ருக்கு மற்­று­மொரு உப அறிக்­கை­யொன்றை அனுப்­பி­வைத்தோம். அவ­ரு­டைய வீடி­யோக்­களின் உள்­ள­டக்­கங்­க­ளையும் நாம் அந்த அறிக்­கையில் குறிப்­பிட்­டி­ருந்தோம்.

2018-.07.-09 ஆம் ஆண்டு சஹ்­ரா­னுக்கு எதி­ராக பிடி­யாணை பெற்று எஸ்.எல்.சேட் நிறு­வ­னத்­துடன் இணைந்து பேஸ்புக் நிறு­வ­னத்­துக்கு கடி­த­மொன்றை அனுப்­பி­யி­ருந்தோம். குறித்த கணக்கின் ஐ.பி. இலக்கம், சம்­பந்­தப்­பட்ட நபரின் தொலை­பேசி இலக்கம், செயற்­ப­டுத்தும் முக­வரி உள்­ளிட்ட விப­ரங்­களைக் கோரி அக்­க­டி­தத்தை அனுப்­பி­யி­ருந்தோம். 2018-.10.-17 ஆம் திகதி அனுப்­பிய இந்தக் கடி­தத்­துக்கும் எந்­த­வி­த­மான பதிலும் வழங்­கப்­ப­ட­வில்லை. பேஸ்புக் போஸ்ட் பற்றி முறைப்­பாடு செய்­யும்­போது அவர்­க­ளுக்கு விளங்­காமல் இருந்­தி­ருக்­கலாம். இத­னா­லேயே நாம் பிடி­யா­ணையைப் பெற்று அத­னுடன் இணைந்து கடி­தத்தை அனுப்­பி­யி­ருந்தோம்.

அதன் பின்னர் சஹ்­ரானின் வெளி­நாட்டுப் பய­ணங்கள் குறித்தும் ஆராய்ந்தோம். அவர்; 2009.-01.-08 ஆம் திகதி ஹொங்கொங் மாத்­திரம் சென்­றி­ருப்­ப­தாக குடி­வ­ரவு குடி­ய­கல்வுத் திணைக்­களம் எமக்குத் தெரி­யப்­ப­டுத்­தி­யி­ருந்­தது. 2018ஆம் ஆண்டில் கெக்­கு­னு­கொல்ல, காத்­தான்­குடி ஆகிய இடங்­க­ளுக்கு அவ்­வப்­போது விசா­ரணைக் குழுக்­களை அனுப்பி அவரைத் தேடு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுத்தோம். 2007ஆம் ஆண்டே மௌல­வி­யாகி வெளியே வரு­கின்றார். தேசிய தௌஹீத் ஜமாஅத் என்ற அமைப்பை நலன்­புரி அமைப்­பாக 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15ஆம் திகதி பதி­வு­செய்தார். அதற்கு முன்னர் அவர் ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் உறுப்­பி­ன­ராக செயற்­பட்­டுள்ளார். பின்னர் அதி­லி­ருந்து பிரிந்து வந்தே தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பை ஆர­ம்பித்தார்.

அவ­ரு­டைய அடை­யாள அட்டை இலக்­கத்தைப் பெற்று அவர் ஏதா­வது கைய­டக்­கத்­தொ­லை­பேசி இலக்­கத்தை பெற்­றுள்­ளாரா என்­ப­தையும் ஆராய்ந்து பார்த்தோம். இவர் சிறந்த போத­க­ராக இருந்­துள்ளார். தன்­னு­டைய நிலைப்­பாடு சரி­யா­னது என்­பதை நிரூ­பிக்கும் வகையில் பேச்­சு­வார்த்­தை­களை நடத்­துவார்.

2019-.03.-12 மாதம் சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­தினர் எம்மை அழைத்து நாம் அனுப்­பிய அறிக்­கையில் காணப்­பட்ட குறை­பா­டு­களை சுட்­டிக்­காட்டி அவற்றை சரி­செய்­யு­மாறு கூறி­னார்கள். 2017.-03.-17 காலி­யி­லுள்ள அமைப்­பொன்றின் பிர­தி­நிதி ஒருவர் எம்­மிடம் முறைப்­பா­டொன்றை செய்­தி­ருந்தார். இது­பற்­றியும் சட்­டமா அதி­ப­ருக்கு வழங்­கிய அறிக்­கையில் குறிப்­பிட்­டி­ருந்தோம். இந்த முறைப்­பாட்டின் விப­ரங்கள் போது­மா­னதாக இல்லை. மேல­திக விப­ரங்­களை இணைக்­கு­மாறு சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­தினால் சுட்­டிக்­காட்­டப்­பட்­டது. மலீக் அஸீஸ் என்ற அர­சாங்க சட்­டத்­த­ர­ணியே எம்மை அழைத்து இந்த விப­ரத்தைக் கூறி­யி­ருந்தார்.

கேள்வி: முறைப்­பாடு என்ன?

பதில்: சஹ்­ரானின் செயற்­பா­டுகள் குறித்து குறிப்­பி­டு­மாறும் அவர்கள் கூறி­யி­ருந்­தனர்.

கேள்வி: கலந்­து­ரை­யா­ட­லுக்கு அழைத்­த­போது பேஸ்புக் பற்றி ஆலோ­சனை வழங்­க­வில்­லையா?

பதில்: கேட்டோம். சகல விட­யங்­க­ளையும் உள்­ள­டக்­கி­ய­தாக அறிக்­கையை சரி­செய்து இரண்டு மாதங்­க­ளுக்குள் கொண்­டு­வ­ரு­மாறு கூறி­யி­ருந்­தார்கள். இதனை சமர்ப்­பிப்­ப­தற்கு முன்னர் தாக்­குதல் நடை­பெற்­று­விட்­டது. சஹ்ரான் பற்றி நாம் செய்த விசா­ரணை, பேஸ்புக் வீடியோ உள்­ளிட்ட சகல விட­யங்­க­ளையும் உள்­ள­டக்­கிய அறிக்­கையை சமர்ப்­பிக்­கு­மாறும் சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­தினால் கோரப்­பட்­டது.

கேள்வி: இந்த அறிக்­கையின் ஊடாக தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பை தடை­செய்­யவா எதிர்­பார்த்­தி­ருந்­தீர்கள்?

பதில்: தடை செய்­வது மாத்­தி­ர­மன்றி அடிப்­ப­டை­வாத செயற்­பா­டு­க­ளுக்கு எதி­ராக எடுக்கக் கூடிய நட­வ­டிக்­கைகள் பற்­றியே நாம் கோரி­யி­ருந்தோம்.

கேள்வி: குண்டுத் தாக்­கு­தல்­களை நடத்­தி­ய­வர்கள் பற்றி முன்­னரே உங்­க­ளுக்குத் தெரி­ய­வந்­தி­ருந்­ததா?

பதில்: சஹ்ரான் பற்­றியும் தெஹி­வளை ட்ரொப்­பிக்கல் இன் விடு­தியில் குண்டை வெடிக்­க­வைத்த நபர் பற்­றி­யுமே தக­வல்கள் கிடைத்­தி­ருந்­தன. தாஜ் சமுத்ரா ஹோட்­டலில் குண்­டு­வைக்க வந்த நபர் அதனை வெடிக்­க­வைக்க முயற்­சித்­துள்ளார். 2019-.04-.12 ஆம் திகதி பேஸ்புக் நிறு­வ­னத்­தினால் சஹ்­ரானின் கணக்கு முடக்­கப்­பட்­டது.

கேள்வி: ஏப்ரல் 10ஆம் திகதி நாட்டில் நடத்­தப்­ப­டக்­கூ­டிய தாக்­கு­தல்கள் தொடர்பில் உங்­க­ளுக்கு அறி­விக்­கப்­பட்­டி­ருந்­ததா?

பதில்: ஆம் எமக்கு முன்­னெச்­ச­ரிக்கை கடிதம் கிடைத்­தது. அதில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்த நபர்­களை கண்­டு­பி­டிப்­ப­தற்கு நாம் நட­வ­டிக்கை எடுத்­தி­ருந்தோம். தாக்­குதல் நடத்தப்படுவதற்கு இடையிலான 10 நாட்களுக்குள் ஒரு சிலரைப் பற்றியே அறிந்துகொள்ள முடிந்தது.

கேள்வி: சஹ்ரான் தரப்பினருக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். இற்கும் இடையில் காணப்படும் தொடர்பு பற்றி உங்கள் விசாரணைகளில் வெளிப்பட்டதா?

பதில்: அவ­ரு­டைய போத­னைகள் அடங்­கிய வீடி­யோக்­களைப் பார்க்­கும்­போதும் எப்­பொ­ழுதும் இஸ்­லா­மிய இராச்­சி­யத்தை உருவாக்குவது பற்­றியே கூறுவார். இறை­வனால் மாத்­திரம் நிர்­வ­கிக்­கப்­படும் நாட்­டி­லேயே நாம் வாழ­வேண்டும். இலங்­கை­யிலும் அவ்­வா­றா­ன­தொரு இராச்­சி­யத்தை உரு­வாக்கும் நாளி­லேயே தமக்கு வெற்றி கிடைக்கும் எனக் கூறி­யுள்ளார். ஐ.எஸ். அமைப்பின் செயற்­பா­டு­களை நியா­யப்­ப­டுத்­தி­யுள்ளார். நேர­டி­யாக ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்­புடன் தொடர்­பி­ருப்­ப­தாக அவர் கூறி­யி­ருந்­தாலும் அது தொடர்பில் எந்தவித தகவல்களும் வெளிப்படவில்லை.

(ஆர்.யசி).

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com