Saturday, July 27, 2019

பிரித்தானிய குப்பைக் கொள்கலன்களின் பின்னணி கண்டறியப்படுமா?

பிரித்­தா­னி­யா­வி­லி­ருந்து சட்­ட­வி­ரோ­த­மான முறையில் குப்­பைகள் அடங்­கிய கொள்­க­லன்கள் இலங்­கைக்கு கொண்டு வரப்­பட்­டுள்ள விவ­காரம் பலத்த சர்ச்­சையைத் தோற்­று­வித்­துள்­ளது. 2017ஆம் ஆண்டு முதல் இவ்­வாறு இலங்­கைக்கு 247 கொள்­க­லன்கள் மூலம் சூழ­லுக்கு தீங்கு விளை­விக்கும் வகை­யி­லான குப்­பைகள் கொண்டு வரப்­பட்­டுள்­ள­தா­கவும் இலங்கை சுங்கத் திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது.

குறித்த கொள்­க­லன்­களில் பெரும்­பாலும் பயன்­ப­டுத்­தப்­பட்ட மெத்­தைகள் காணப்­ப­டு­வ­துடன், மெத்­தை­க­ளுக்குள் மருத்­துவ மற்றும் வேறு வகை­யி­லான கழிவுப் பொருட்கள் மறைத்து வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் சுங்கத் திணைக்­க­ளத்தின் அதி­கா­ரிகள் குறிப்­பி­டு­கின்­றனர்.

கொழும்பு துறை­மு­கத்தின் ஊடாக கொண்டு வரப்­பட்ட இந்த குப்­பைகள், கொழும்பு துறை­முகம் மற்றும் கட்­டு­நா­யக்க பகு­தி­யி­லுள்ள தனியார் நிறு­வ­ன­மொன்றின் வளாகம் ஆகி­ய­வற்றில் களஞ்­சி­யப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

இதே­வேளை இவ்­வாறு இலங்­கைக்குள் கொண்டு வரப்­பட்­டுள்ள அனைத்து குப்­பை­களும் சூழ­லுக்கும், சுகா­தா­ரத்­திற்கும் பெரு­ம­ளவில் தீங்கு விளை­விக்கும் வகை­யி­லான குப்­பைகள் என மத்­திய சுற்­றாடல் அதி­கார சபை சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

கட்­டு­நா­யக்க பகு­தி­யி­லுள்ள களஞ்­சி­ய­சா­லை­யொன்றில் 130 கொள்­க­லன்­களில் கொண்டு வரப்­பட்ட 27,685 மெற்றிக் தொன் எடை­யு­டைய குப்­பைகள் 50,000 அடி நீளத்­திற்கு கொட்டி வைக்­கப்­பட்­டுள்­ளன. இதன் மூலம் சூழ­லுக்குப் பாதிப்பு ஏற்­பட்­டுள்­ள­துடன் குறித்த குப்­பை­க­ளினுள் இரத்தம், மனித அவ­ய­வங்கள் உள்­ளிட்ட கழி­வு­களும் காணப்­ப­டு­வதால் இதன் மூலம் பாரிய சுகா­தார ரீதி­யான அச்­சு­றுத்தல் ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் இவற்­றி­லி­ருந்து வெளி­யா­கவும் கழிவு நீர் முத்­து­ரா­ஜ­வல பாது­காக்­கப்­பட்ட வனத்தைச் சென்­ற­டை­வ­தா­கவும் சுற்றுச் சூழல் வல்­லு­நர்கள் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர்.

இதற்­கி­டையில் இலங்­கைக்கு குப்­பை­களைக் கொண்டு வந்த நிறு­வ­னத்­திற்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு கோரி, சூழலை பாது­காக்கும் கேந்­திர நிலை­யத்­தினால் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்தில் மனு­வொன்றும் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது. இந்த குப்­பை­களை நாட்­டிற்குள் கொண்டு வந்த தரப்­பினர் அடை­யாளம் காணப்­பட்டு, அவர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்டும் என அந்த மனுவின் ஊடாக வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது.
உண்­மையில் 1980ஆம் ஆண்டு 47ஆம் இலக்க தேசிய சுற்­றாடல் சட்­டத்தின் பிர­காரம், ஏதேனும் பொருட்­களை நாட்­டுக்குள் கொண்டு வர வேண்டும் என்றால், மத்­திய சுற்­றாடல் அதி­கார சபை­யி­ட­மி­ருந்து சுற்­றாடல் தேசிய பாது­காப்பு அனு­மதி பத்­தி­ரத்தை பெற்றுக் கொள்ள வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். எனினும், சுற்­றாடல் அதி­கார சபை­யி­ட­மி­ருந்து இந்த குப்பைக் கொள்­க­லன்­களைக் கொண்டு வந்த குறித்த தனியார் நிறு­வ­னங்கள் எந்­த­வொரு அனு­ம­தி­யையும் பெற்றுக் கொள்­ள­வில்லை என தெரிய வந்­துள்­ளது.

சர்­வ­தேச சட்ட விதி­மு­றை­களை மீறி இந்த குப்­பைகள் நாட்­டிற்­குள்­கொண்டு வரப்­பட்­டுள்­ள­தாக பல்­வேறு தரப்­பி­னரும் குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்து வரு­கின்­றனர். எனினும் இலங்கை நிதிச் சட்­டத்தில் 2013ஆம் ஆண்டு ஜூலை மாதம் 11ஆம் திகதி மேற்­கொள்­ளப்­பட்ட திருத்­தத்தின் பிர­கா­ரமே இந்த குப்­பைகளை நாட்­டிற்­குள் ­கொண்டு வரு­வ­தற்­கான சந்­தர்ப்பம் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் சிலர் சுட்­டிக்­காட்­டு­கின்­றனர். முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ, நிதி அமைச்சர் என்ற விதத்தில் இந்த வர்த்­த­மானி அறி­வித்­தலில் கையெ­ழுத்­திட்­டுள்­ள­தாக குற்றம் சுமத்­தப்­ப­டு­கின்­றது. இந்த வர்த்­த­மானி அறி­வித்­தலை பயன்­ப­டுத்தி மீள் ஏற்­று­மதி மத்­திய நிலையம் என்ற போர்­வையில் இந்த நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ள­தாக மத்­திய சுற்­றாடல் அதி­கார சபை சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

இவ்­வாறு இந்தக் குப்பை கொள்­க­லன்­களின் பின்­ன­ணியில் பல மறை­க­ரங்கள் இருப்­பது தற்­போது வெளிச்­சத்­திற்கு வர ஆரம்­பித்­துள்­ளது. பல்­தே­சிய கம்­ப­னி­களின் நலன்­க­ளுக்­காக இவ்­வாறு ஆபத்­தான வெளி­நாட்டுக் குப்­பைகள் இலங்­கைக்குள் தரு­விக்­கப்­ப­டு­கின்­ற­னவா எனும் கேள்­வியும் அச்­சமும் தற்­போது எழுந்­துள்­ளது. புத்­தளம் அரு­வாக்­காலு குப்பை கொட்டும் திட்டம் நிர்­மா­ணிக்­கப்­பட்­ட­தற்கும் இதற்கும் தொடர்­புகள் உள்­ள­னவா எனும் சந்­தே­கமும் எழ ஆரம்­பித்­துள்­ளன.

இலங்­கையில் சேரும் குப்­பை­க­ளையே முறை­யாக நிர்­வ­கிக்கத் திரா­ணி­யற்ற அர­சாங்கம் இவ்­வாறு வெளி­நாட்டுக் குப்­பை­க­ளையும் நாட்­டுக்குள் கொண்­டு­வர அனு­மதி வழங்­கி­யி­ருக்­கு­மாயின் அது மிகவும் துர­திஷ்­ட­வ­ச­மா­ன­தாகும். அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பில் விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதுடன் குப்பைகளைக் கொண்டுவர சட்டரீதியாக வழங்கப்பட்டுள்ள அனுமதியும் உடன் இரத்துச் செய்யப்பட வேண்டும். அத்துடன் மத்திய சுற்றாடல் அதிகார சபை சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனங்களை வலியுறுத்தியுள்ளது போன்று கட்டுநாயக்க ஏற்றுமதி வளாகத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள குப்பைகளை, தமது செலவிலேயே ஏற்றுமதி செய்த நாட்டிற்கே மீள் ஏற்றுமதி செய்ய வேண்டியதும் அவசியம் என்பதை வலியுறுத்த விரும்புகிறோம்.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com