Wednesday, June 19, 2019

இராஜனாமா நாடகம் முடிவுற்றது. இருவர் பதவியேற்பு! கைவிடப்படும் றிசார்ட் மற்றும் ஹிஸ்புல்லா.

கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் முஸ்லிம் அமைச்சர்கள் யாவரும் பதவிகளை இராஜனாமா செய்திருந்தனர். மூன்று முஸ்லி;ம் அரசியல்வாதிகள் பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருக்கின்றார்கள் என்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அவர்கள் பதவிகளை இராஜனாமா செய்யவேண்டும் என அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டபோது முஸ்லிம் அமைச்சர்கள் யாவரும் இராஜனாமா செய்திருந்தனர் என்பது யாவரும் அறிந்த விடயம்.

அவ்வாறு இராஜனாமா செய்து கொண்டவர்கள் தற்போது பதவிகளை மீளப்பெற ஆரம்பித்துள்ளனர். அந்தவகையில் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கபீர் ஹாசீம் மற்றும் அப்துல் காலிம் ஆகியோரே இவ்வாறு மீண்டும் பதவிகளை பெற்றுக்கொண்டுள்ளனர்.

இவர்கள் ஏலவே பதவி வகித்துவந்த அமைச்சுப்பதவிகளையே மீண்டும் பெற்றுள்ளனர். அதன்பிரகாரம் கபீர் ஹாசிம் நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி, பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சராகவும் மற்றும் அப்துல் ஹலீம் தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சராகவும் பதவியேற்றுள்ளனர்.

அமைச்சுப் பதவிகளை மீண்டும் ஏற்பது தொடர்பில் நேற்று முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களிடையே இடம்பெற்ற கலந்துரையாடல் எவ்வித முடிவுகளும் எட்டப்படாது முடிவடைந்த நிலையிலேயே இப்பதவி ஏற்பு நிகழ்ந்துள்ளது. இதனால் மேலும் முஸ்லிம் அரசியல் வட்டாரங்களில் குழப்பங்கள் தோன்றலாம் என்றும் றிசார்ட் பதுயுதீன் மற்றும் ஹிஸ்புல்லா போன்றோர் கைவிடப்படலாம் எனவும் அறியக்கிடைக்கின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com