Saturday, April 6, 2019

கொமாண்டோ படையணியையும் பொறுப்பேற்றார் சாவேந்திர சில்வா.

புலிகளுடனான யுத்தத்தில் பிரதான படையணி ஒன்றுக்கு தலைமைதாங்கிய மேஜர் ஜெனரல் சாவேந்திர சில்வா கொமாண்டோ படையணியின் புதிய தளபதியாக பதவியேற்றுள்ளார். நேற்று (05) ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை கனேமுல்லை பிரதேசத்தில் அமைந்திருக்கும் கொமாண்டே படையணி தலைமையகத்தில் சம்பிரதாய நிகழ்வுடன் பதவி பொறுப்போற்கும் நிகழ்வு இடம் பெற்றது.

அதனைத் தொடர்ந்து மத வழிப்பாடுகளுடன் உத்தியோகபுர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டு பதவியை பொறுப் பேற்றுக் கொண்ட அவர்படைத் தலைமையக வளாகத்தில் ஒரு மரத்தை நடும் நிகழ்வில் கலந்து கொண்டார்.

இப் படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த புதிய தளபதிக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி இராணுவ மரியாதை வழங்கப்பட்டதுடன் பிரிகேடியர் பிரசன்ன சேனாரத்ன மற்றும் கொமாண்டோ படையணி கட்டளை தளபதிகள் உட்பட அனைத்து அதிகாரிகளால் வரவேற்கப்பட்டார்.

கொமாண்டோ படையணியின் தளபதியான மேஜர் ஜெனரல் ரூல்ப் நுகேரா அவர்கள் இராணுவ சேவையில் இருந்து ஓய்வு பெற்றதன் நிமித்தம் புதிய தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் பதவி பொறுப்பேற்றார்.

இந்த நிகழ்வில் பிரிகேடியர் பியந்த சேனாரத்ன பிரிகேடியர் உபாலி ராஜபக்க்ஷ ஒபரேஷன் பணிப்பகத்தின் பிரிகேடியர் உதித்த பண்டார கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் ஜெனரல் ஸ்டாப் கேர்ணல் அணில் சேமசிரி மற்றும் கட்டளை தளபதி பிரிகேடியர் கேணல் ஷாமல் சில்வா மற்றும் கொமாண்டோ படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டன.

இராணுவத்தின் பிரதான அதிகாரியாக அவர் நியமிக்கப்பட்டபோது அந்நியமனத்திற்கு எதிராக உள்நாட்டிலும் வெளிநாட்டிலுமிருந்து எதிர்ப்பலைகள் எழுந்த நிலையிலேயே, அவருக்கு மேலதிக பதிவி ஒன்று வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com