Wednesday, April 10, 2019

அரசு ஆதரவுடனேயே புலிகள் வெருகல் படுகொலையை நிகழ்த்தினர். எழுகதிரோன்

வெருகல் படுகொலை தினத்தின் பதினைந்தாவது வருட நினைவு நாள் சித்திரை 10ஆம் நாள் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. மட்டக்களப்பு வெருகல் மலைப்பூங்காவில் அமைந்துள்ள வெருகல் படுகொலை நினைவிடத்தில் இதன் நிகழ்வுகள் வருடந்தோறும் நிகழ்கின்றன. .

2004ஆம் ஆண்டு தமிழீழ விடுதலை புலிகளின் அனைத்துவித துறைசார் கட்டமைப்புகளிலிருந்தும் கிழக்கு மாகாணம் புறக்கணிக்கப்பட்டமையால் போரின் முதுகெலும்பாக இருந்த கிழக்கு போராளிகளுக்குள் அதிருப்திகள் தலை தூக்கின.

இதன்காரணமாக கிழக்கு மாகாணத்தின் அனைத்துவிதமான முகாம்களிலுமிருந்த சுமார் 6000 கிழக்கு போராளிகள் அவ்வமைப்பில் இருந்து பிரிந்து நின்றனர்.

அவர்களது அதிருப்திகளையோ கருத்துக்களையோ செவிமடுக்க மறுத்த தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களை துரோகிகள் என பிரகடனம் செய்து அவர்கள் மீது யுத்தம் தொடுக்க உத்தரவிட்டார்.

அவ்வேளையில் அரச படைகளுடன் தமிழீழ விடுதலை புலிகள் யுத்த நிறுத்தம் செய்து பேச்சுவார்த்தைகள் இடம் பெற்றுக்கொண்டிருந்தமையால் அந்த பேச்சுகளுக்கு மத்தியஸ்தம் வகித்த நோர்வே தலைமையிலான யுத்த நிறுத்த கண்காணிப்பு குழுக்கள் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் கடமையில் ஈடுபட்டிருந்தன.

அதன்காரணமாக படைகளை நகர்த்துவதோ, ஆயுதங்களை இடம்மாற்றுவதோ, எடுத்து செல்வதோ அரச-புலிகள் இருதரப்பினருக்கும் தடை செய்யப்பட்ட ஒன்றாகவிருந்தது.

ஆனால் அந்த சமாதான காலத்தில் யுத்தநிறுத்த மீறல்களை செய்து வன்னியிலிருந்து வடக்கு புலிகள் ஓமந்தை சோதனை சாவடிகளை தாண்டி வெருகலாற்றங்கரையில் தரையிறக்கப்பட்டனர்.

*இது எப்படி சாத்தியம்?

*பலநூறு புலிகளை ஓமந்தையை தாண்டி ஐந்து பஸ்கள் நிறைய
ஆயுதங்களுடன் 150கிலோ மீற்றர்கள் பயணித்து வெருகல் வரை
செல்ல அனுமதி வழங்கியவர்கள் யார்?

*அந்த பேரம்பேசலில் அன்றைய ஜனாதிபதி
சந்திரிகாவுடன் புலிகளுக்காக தமிழ் செல்வனின் ரகசிய
செய்திகளுடன் பேரம்பேசலில் ஈடுபட்ட தமிழ் தலைவர் யார்?

*வெருகல் தாக்குதல் இடம்பெறுவதற்கு முதல் நாளே ஏன்
நோர்வே தலைமையிலான சமாதான செயலகம் கிழக்கு
மாகாணத்திலுள்ள அலுவலகங்களை தற்காலிகமாக மூடிவிட்டு சென்றனர்?

*இது சமாதானம் பேச வந்த மேற்கத்தேய
மத்தியஸ்தர்களின் படுகொலைக்கு உடந்தைனான
செயற்பாடு இல்லையா?

*இதனை சர்வதேசத்தின் எந்தமனிதாபிமான தார்மீக செயலில்
அடக்க முடியும்?

எனவேதான் நோர்வே-இலங்கையரசு ஆதரவுடனேயே புலிகள் வெருகல் படுகொலையை நிகழ்த்தினர் என்பது புலனாகின்றதல்லவா?

சகோதர யுத்தத்தை ஊக்குவித்து புலிகளின் பலத்தை சரிபாதியாக குறைப்பதில் அவர்கள் போட்ட கணக்கு வென்றது.

இதனால் சுமார் 210 கிழக்கு புலிகள் கொன்றொழிக்கப்பட்டனர். சரணடைந்த பெண் போராளிகள் வன்னிப்புலிகளால் மானபங்கப்படுத்தப்பட்டு சீரழிக்கப்பட்டு கொல்லப்பட்டனர். அவர்களது உடலங்களை அடக்கம் செய்யக்கூடாதென்று வன்னிபுலிகள் கட்டளையிட்டு அக்கிராம மக்களை துரத்தியடித்தனர். இதன்காரணமாக அப்போராளிகளின் உடல்கள் நாய்களும் நரிகளும் தின்ற மிச்சங்களாக வெயிலில் வெம்பி வெடித்து காய்ந்து கருகி கிடந்தன. நாலைந்து நாட்களின் பின்னர் திரும்பிவந்த ஊரவர்கள் இராணுவத்திடம் உதவி கோரி அவ்வுடலங்களை ஆங்காங்கே பத்தும் பதினைந்தும் இருபதுமாக புதைத்தனர்.

*ஆனால் யுத்தத்தில் நடந்த மனிதஉரிமை மீறலுக்காக
குரல்கொடுக்கின்ற ஜெனிவா கோமாளிகள் ஒருபோதும்
இந்த வெருகல் படுகொலை குறித்து வாய்திறப்பதேயில்லை ஏன்?

*அந்த கிழக்கு போராளிகள் தமிழர்கள் இல்லையா?

*யார் இவர்களுக்காக இதுவரை நீதி கோரியிருக்கின்றனர்?

*ஆனால் இந்த அகோரமான வெருகல் படுகொலையை
நடத்தியவர்களுக்கு காலம் தீர்ப்பளித்தது.

ஆம் வெருகல் படுகொலையை நிகழ்த்திய அன்றே வெள்ளாம் முள்ளிவாய்க்காலின் இறுதி நாள் தீர்மானிக்கப்பட்டுவிட்டது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com