Tuesday, April 9, 2019

அந்நிய சக்திகளிடமிருந்து நாட்டை காக்க வேண்டுமாயின் மஹிந்த மைத்திரி இணையவேண்டும். குணதாச அமரசேகர

வெளிநாட்டவர்களின் ஆதிக்கத்திலிருந்து நாட்டை மீட்டு நாட்டு மக்களுக்காக செயற்படும் ஒரு அரசாங்கத்தினை பலமான முறையில் உருவாக்குவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும், ஸ்ரீலங்கா பொது ஜன முன்னணியினரும் ஒன்றிணைய வேண்டும் என தெரிவித்த தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியத்தின் தலைவர் குணதாச அமரசேகர இவ்விரு கட்சிகள் மட்டுமன்றி அனைத்து சிறிய கட்சிகளும் கட்சி பேதங்களை மறந்து நாட்டின் ஜனநாயகத்திற்காக ஒன்றிணைய வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

தேசிய அமைப்புக்களுக்கான பொது நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,

நாட்டின் தற்போதைய நிலையை எடுத்து கொண்டால் வெளிநாட்டவர்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட நிலையில் காணப்படுகின்றது. அவ்வாறாக கடந்த காலங்களிலும் கூட, மனித உரிமைகள் பேரவையின் செயற்பாடகளும் எமது நாட்டை கட்டுப்படுத்தி தமது ஆதிக்கத்திற்கு கீழ கொண்டு செல்லும் வகையிலேயெ அமையப்பெற்றிருந்தன.

அத்துடன் தற்போதைய ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கமும் வெளிநாட்டவர்களின் ஆதிக்கத்திற்கு ஆதரவு வழங்கும் செயல்களையே மேற்கொண்டும் வருகின்றது.

அந்த வகையில் நோக்கும் போது ,அமெரிக்க நிறுவனமான அமெரிக்கன் சலெஞ் கோப்பரேசன் என்னும் நிறுவனம் பிரதமரின் உத்தியோக பூர்வ வாசத்தலத்தில் நிறுவப்பட்டுள்ளதுடன், நாட்டின் நிலப்பரப்ப தொடர்பான சட்டங்களை முடிக்கும் வகையிலான ஒப்பந்தமொன்றிலும் அரசாங்கம் கைச்சாத்திடவுள்ளது.

இத்தகைய செயற்பாடுகளினூடாக நாடு முழுமையாக வெளிநாட்டவர்களின் ஆதிக்கத்திற்கு உட்படும் தர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டள்ளது.

இவ்வாறான நிலையில் ஜக்கியதேசிய கட்சி அரசாங்கத்தை தொடர விட்டோமேயானால் எதிர்காலத்தில் நாடு பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் தெரிவித்தார்.

இதேநேரம் நாட்டின் தேசிய வளங்களை வெளிநாட்டவர்களுக்கு தாரைவார்த்து கொடுக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என தெரிவித்த தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியத்தின் செயலாளர் வசந்த பண்டார, இத்தகைய செயலுக்கு எதிராக அனைவரும் அணிதிரள வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

தேசிய அமைப்புக்களுக்கான பொது நிலையத்தில் இன்று வெளிநாட்டவர்களின் ஆதிக்கத்திலிருந்து நாட்டை மீட்க மேற்கொள்ள வேண்டிய விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு தெளிவுப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அத்துடன் நாட்டை வெளிநாட்டவர்களின் ஆதிக்கத்திற்கு உட்படுத்தும் செயற்பாடுகளை முடிவுக்கு கொண்டுவர ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியினரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com