Thursday, April 18, 2019

மேலதிக பொலிஸ் பாதுகாப்புத் கேட்டுச் சென்ற சிறிதரன் மூக்குடைபட்டார்.

இலங்கை அரசாங்கத்திடம் பின்கதவால் நுழைந்து கருமங்களை பெற்றுக்கொள்வதில் தற்போது முன்னணியில் நிற்பவர் கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன். அவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோதும், கிளிநொச்சியில் ரணில் விக்கிரமசிங்கவின் செல்லப்பிள்ளையாகவே காணப்படுகின்றார் என்பது கடந்த காலங்களில் நிரூபிக்கப்பட்டமை யாவரும் அறிந்த விடயம்.

கிளிநொச்சியில் தனக்கென அலுவலகம் ஒன்றை அமைத்து அம்மக்களிடம் வெறுமனே உணர்ச்சி வசனங்களை பேசி வாக்கு வங்கியை தக்க வைத்துக்கொண்டிருக்கும் சிறிதரன், தனது காரியாலயத்திற்கு ஆறு பொலிஸாரை காவலுக்கு வைத்துள்ளார். தமிழ் மக்களின் பிரதிநிதியான சிறிதரனின் கிளிநொச்சி அலுவலகத்திற்கு ஆறு பொலிஸார் எதற்காக என்ற கேள்விகளை அக்காரியாலயத்திற்குச் சென்று அசௌகரியங்களை அனுபவித்து வருகின்ற மக்கள் கேட்டுக்கொண்டிருக்கின்ற இத்தருணத்தில், சிறிதரன் தனது குடும்பம் யாழ்பாணத்தில் தங்கியுள்ள வீட்டிற்கு மேலதிக பொலிஸ் பாதுகாப்பு கோரியுள்ள விடயம் அம்பலமாகியுள்ளது.

அண்மையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மேயர் ஆர்னோல்ட் மற்றும் சயந்தனுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் உண்டென்றும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படவேண்டும் என்றும் பா.உ சுமந்திரன் பொலிஸ் மா அதிபரிடம் வேண்டுதல் விடுத்திருந்தார். இவ்வேண்டுதல் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சுக்கு அறிக்கையிட்டுள்ள பொலிஸ் திணைக்களம் மேற்படி இருவருக்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கும் அளவுக்கு அச்சுறுத்தல்கள் ஏதும் இல்லை எனத் தெரிவித்துள்ளது.

பொலிஸ் தலைமையகம் யாழ் பொலிஸ் புலனாய்வுத் பிரிவினரிடமிருந்து பெற்றுக்கொண்ட தகவல்களின் பிரகாரமே மேற்படி முடிவுக்கு வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் சிறிதரன் சற்று காலங்களுக்கு முன்னர் தனது குடும்பத்தினருக்கு யாழ்பாணத்தில் பாதுகாப்பு வழங்கப்படவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தமை தொடர்பிலும் அறிக்கையிட்டுள்ளனர். கிளிநொச்சியிலுள்ள சிறிதரனின் அலுவலகத்திற்கு 6 பொலிஸார் பாதுகாப்புக்கு வழங்கியுள்ள நிலையில் அவரது குடும்பத்தினருக்கு மேலதிக பாதுகாப்பினை வழங்க முடியாது என்று அவர்கள் பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவித்துள்ளனர்.

இதேநேரம் வடக்கில் படையினரின் பிரசன்னத்திற்கு எதிராக கூக்குரல் இட்டுவரும் அனந்தி சசிதரன் மாகாண சபை கலைக்கப்பட்ட பின்னர் தனது பொலிஸ் பாதுகாப்பை வாபஸ் பெறவேண்டாம் என மன்றாட்டக் கடிதம் ஒன்றை பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பி வைத்திருந்தார். இது தொடர்பாக அத்தருணத்தில் யாழ் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக செயற்பட்டிருந்தவர் தனது எதிர்ப்பை தெரிவித்து பொலிஸ் பாதுகாப்பை வாபஸ் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவ்வாறே எதிர்கட்சி தலைவராக இருந்த தவராசாவினது வேண்டுதலும் நிராகரிக்கப்பட்டது என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

1 comments :

Anonymous ,  April 18, 2019 at 8:05 PM  

Wow, this paragraph is fastidious, my sister is analyzing these kinds
of things, thus I am going to inform her.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com