Wednesday, December 14, 2011

பொன்சேகா விடுதலை பிரச்னையில் தலையிட தயார்: அமெரிக்கா

இலங்கை முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவின் விடுதலை தொடர்பான விடயத்தில் போதியளவு கையொப்பங்கள் திரட்டப்பட்டால், தலையிட தயார் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. சரத் பொன்சேகாவின் குடும்ப அங்கத்தினர்கள் இந்த கோரிக்கை மனுக்கான கையொப்பங்களை திரட்டும் நடவடிக்கைகளை தொடங்கி உள்ளதுடன், பொன்சேகாவை விடுதலை செய்வது தொடர்பாக இணையத்தின் ஊடாக, அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு மனு ஒன்று அனுப்பி வைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

25,000 கையொப்பங்கள் திரட்டப்பட்டால் பொன்சேகா விவகாரத்தில் தலையிட முடியும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.

உலகின் எந்தவொரு நாட்டிலிருந்தும் 25,000 த்திற்கும் மேற்பட்ட கையொப்பங்களுடன் மனு அனுப்பி வைக்கப்பட்டால் அந்த விடயம் தொடர்பாக வெள்ளை மாளிகை தலையீடு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com