Sunday, March 10, 2019

பலம் பொருந்திய கூட்டமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் - தயாசிறி ஜயசேகர

அடுத்து இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியை தோற்கடிக்க வேண்டும் என, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் ஒன்றிணைந்து பலம் பொருந்திய கூட்டமைப்பொன்றை உருவாக்குவதன் முலமே, ஐக்கிய தேசிய கட்சியை தோற்கடிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தமது தரப்பினரால் உருவாக்கப்படவுள்ள புதிய பலமான கூட்டணியை ஒழிப்பதற்கு பல முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனினும் அவற்றை வெற்றிகொண்டு நாட்டுக்காக சிறந்த சேவைகளை வழங்க தமது தரப்பு தயாராக உள்ளதாக அவர் கூறினார்.

அங்குனுகொலபெலஸ்ஸ பகுதியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர இதனை குறிப்பிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com