Sunday, March 10, 2019

நாடு இக்கட்டான நிலையில் உள்ளது - அனுர குமார திஸாநாயக்க

நாடு தற்போது இக்கட்டான சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டிருப்பதாக, ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது. ஜே.வி.பி யின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திஸாநாயக்க இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது, அந்த நாட்டின் ஜனநாயகத்திலும், பொருளாதாரத்திலுமே தங்கியுள்ளது. இலங்கையில் தற்போது நிறைவேற்று அதிகாரம் தலைதூக்கியுள்ளமையால், இங்கு ஜனநாயகமோ, பொருளாதார வளர்ச்சியோ சரியான முறையில் இடம்பெறவில்லை. இதன் காரணமாக நாடு தற்போது இக்கட்டான சூழ்நிலையில் இருப்பதாக அனுர குமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே, அவர் இதனை கூறினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com