Sunday, March 10, 2019

மின்சார பாவனை குறித்து பொதுமக்களுக்கு விசேட அறிவுறுத்தல்

பொதுமக்கள் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு, மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. வரலாற்றிலேயே அதிக மின்பாவனை கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்னர் பதிவாகியிருந்த நிலையில், இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் அதிக வெப்பமான வானிலை காரணமாக பொதுமக்கள் அதிகமாக மின்சாதனங்களை பயன்படுத்துவதாகவும், இதன்காரணமாக நீர் நிலைகளின் நீர் மட்டம் குறைவடைத்துள்ளதாகவும், மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக கொத்மலை, ரன்டெம்பே, போனவத்த முதலான நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் குறைவடைந்துள்ளது. இந்த நிலைமை நீடித்தால், பொதுமக்களுக்கான குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவித்த மேற்படி அமைச்சு, மக்கள் மிகுந்த சிக்கனமாக மின்சாரத்தை உபயோகிக்க வேண்டும் என, அறிவுறுத்தியுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com