Monday, March 4, 2019

இந்தியாவில் மறைந்து வாழ்ந்த கொலை குற்றவாளி புளூமென்டல் சங்க கைது

புளூமென்டல் சங்க எனும் டி.சங்க என்பவரும் மற்றுமொரு இலங்கையரும் இந்தியாவின் தமிழ்நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாடு ராமநாதபுரம், தங்கப்பா நகர்ப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில், அறிமுகமில்லாத சிலர் தங்கியிருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்த நிலையில், உடனடியாக சுற்றிவளைப்பில் ஈடுபட்டபோதே குறித்த இரண்டுபேருடன் மேலும் ஒரு இந்திய பிரஜையும் கைது செய்யப்பட்டுள்ளதாக, குறித்த செய்திகள் தெரிவிக்கின்றன. முதலில் இவர்கள் குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தை மீறி, தங்கியிருந்த குற்றச்சாட்டிற்காகவே கைது செய்யப்பட்டிருந்தனர்.

புளூமென்டல் சங்க தனது பெயரை குமார் என்றும், தனது வசிப்பிடம் திண்டுகல் எனவும் குறிப்பிட்டு அடையாள அட்டை ஒன்றை வைத்திருப்பது விசாரணையில் வெளிவந்துள்ளது. ஆனால் கைதானவர்தான் கொழும்பைச் சேர்ந்த 33 வயதுடைய டி. சங்க மற்றும் 28 வயதடைய சப்ராஸ் மொஹமட் என்பது கண்டறியப்பட்டுள்ளது. குறித்த இருவரும் கொலைச் சம்பவம் ஒன்றில் ஈடுபட்டுவிட்டு, தப்பித்து இந்தியாவில் வாழ்கின்றமை கண்டறியப்பட்டுள்ளதாக இந்திய பொலீசார் தெரிவிக்கின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com