Monday, March 4, 2019

இன்றும் 20 ஏக்கர் மக்கள் காணிகள் விடுவிப்பு

யாழ் - வலிகாமம் வடக்கில் இராணுவத்தின் பிடியில் இருந்த 20 ஏக்கர் காணிகள் இன்று விடுவிக்கப்பட்டுள்ளன. குறித்த காணிகள் படையினரின் தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வந்தநிலையில், தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் வைத்து யாழ் மாவட்ட இராணுவத் தளபதி தர்சன கெட்டியாராச்சியினால்அவற்றிக்கான காணிப்பத்திரம் யாழ். மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே 251, 253, 246 ஆகிய கிராம சேவகர் பரிவிலுள்ள காணிகளே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளன. இதனிடையே, நீண்ட காலமாக படையினர் வசமிருந்த காணிகளை விடுவிக்கும் செயற்பாடு நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com