Friday, March 8, 2019

கண்டியில் ஒருவழி போக்குவரத்து திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது - காவல்துறையினர்

கடந்த சில நாட்களாக கண்டி மாநகரில் அமுலான ஒருவழி போக்குவரத்து திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். கண்டி - கொழும்பு பிரதான வீதிகளில் கண்டியிலிருந்து கெட்டம்பே வரையான ஒருவழி போக்குவரத்து திட்டமே இவ்வாறு நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த பகுதிகளில் தற்போது சீரான முறையில் இருவழி போக்குவரத்து இடம்பெறுவதாக கண்டி பொலிஸ் நிலையத்தில் போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான பிரதான இன்ஸ்பெக்டர் குறிப்பிட்டார்.

இதேவேளை போக்குவரத்து சேவைகள் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, விசேட திட்டமொன்றை இன்று அமுலாக்கியுள்ளார்.

தொடரூந்துகளில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, ''மகளிருக்கு மட்டும்'' எனும் திட்டத்தை அவர் அமுல்படுத்தியுள்ளார்.

இதன் மூலம், தொடரூந்துகளில் பெண்கள் பயணிப்பதற்கான தனியான பயண பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. பல்வேறு வகையில் தொடரூந்தில் பயணிக்கும் பெண்கள் துன்பப்படுகின்றனர்.

இந்த நிலையில் சர்வதேச மகளிர் தினமான இன்று, குறித்த திட்டம் அமுலாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com