Thursday, March 7, 2019

ஓப்xராம் வட மாகாண சபையின் கல்வித் திணைக்களச் செயலாளர் சத்தியசீலன்.

வட மாகாணத்தின் கல்வி பண்பாட்டலுவல்கள் , விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் சகல வலையக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் „ஓப்பாராம்" என்று கடதமூலம் அறிவித்துள்ளார்.

சிவராத்திரிக்கு மறுநாள் ஆளுனரால் வழங்கப்பட்ட விடுமுறைக்கு மாற்று பாடசாலை நாளை அறிவிக்கும் பொருட்டு வலயக் கல்விப்பணிப்பாளர்களுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் இந்த மிரட்டலை விடுத்துள்ளார்.

தமிழ் மொழி எங்கள் மூச்சு என்கின்ற எமது அரசியல்வாதிகளும் அரச உத்தியோகித்தர்களும் தமிழை வைத்தே காலத்தை கடத்திக்கொண்டிருக்கின்றார்கள். இலங்கையிலே அரச கரும மொழியான தமிழ் மொழிக்கு எங்காவது பிசகு ஏற்பட்டு விட்டுவிடுமானால் அதை வைத்து அரை ஆண்டுகள் காலம் ஓட்டுவார்கள்.

மேலும் காலியில் மாத்தறையில் எங்காவது ஓர் பெயர்ப்பலகையில் எழுத்துப்பிழை ஏற்படுமாயின், தமிழை சிங்களவன் கொன்றுவிட்டான் என உலகம் பூராகவும் அந்தியேட்டி கிரிகைகளை செய்வார்கள்.

இந்நிலையில் வட மாகாணத்தின் கல்வி பண்பாட்டலுவல்கள் , விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சினால் அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் தமிழ் கொல்லப்பட்டுள்ள விதத்தினை இங்கு காணலாம்.



அத்துடன் வடமாகாண கல்வி மற்றும் பண்பாட்டலுவல்கள் அமைச்சு சைவ சமயத்திற்கு பதிலாக புதிய சமயம் ஒன்றை கண்டுபிடித்துள்ள விவகாரத்தையும் கடிதத்தின் ஊடாக அறிந்து கொள்ள முடிகின்றது.


அண்மையில் சிங்கள பொலிஸ் கொஸ்தாபல் ஒருவர் குற்றப்பற்றுச்சீட்டு தமிழ் மொழியில் வழங்காகததால் மனித உரிமை மீறல் வழக்கு வரை சென்று தமிழின் காவலர்களாக தங்களை உயர்த்திய காட்டிய உத்தமர்கள் பற்றியும் இங்கு குறிப்பிட்டாகவேண்டும்.

குறித்த செயலாளருக்கு எதிராக தமிழை கொன்ற வழக்கு தொடரப்படுமா?

1 comments :

Unknown March 7, 2019 at 7:15 PM  

இவங்கள திருத்தவே ஏலாது

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com