Thursday, March 7, 2019

இலங்கையில் உள்ள பெற்றோர்களின் கவனத்திற்கு...

குழந்தைகள் வளர்ந்து பாடசாலைகளுக்குச் செல்வதற்கு முன்னர் அவர்கள் முன்பள்ளிகளுக்கு தற்போது முக்கியத்துவம் பெற்ற ஒன்றாக மாறியுள்ளது. இந்த நிலையில் இலங்கையில் குறிப்பாக கொழும்பை அண்டிய பகுதிகளில் காணப்படும் முன்பள்ளிகளில் சிறுவர்களுக்காக விளையாட்டு மைதானம் இல்லை என்று பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

சிறுவர்களுக்கு விளையாட்டே முக்கிய அம்சமாக இருக்கும் நிலையில் அவர்கள் விளையாடுவதற்கு மைதானம் ஒன்று இல்லாமை பாரிய பாதிப்பு என, நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த விடயம் தொடர்பில் உரிய தரப்பினர் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாகும்.

இதேவேளை நாட்டில் நிலவும் அதிக வெப்பமான காலநிலையால் சிறுவர்கள் பெரிதும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக, மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் புத்தளம் மற்றும் ஹம்பந்தோட்டை மாவட்டத்தில் நாளைய தினம் வெப்பமான காலநிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

வெப்பமான வானிலையினால், அதிக களைப்பு உள்ளிட்ட உடலில் மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்பதனால், போதுமான அளவு நீரை அருந்துமாறும், வெயிலில் அதிகம் இருப்பதை தரித்திருத்துக்குமாறு சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளதாக என காலநிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக சிறுவர்கள் மற்றும் நோயாளிகள் இந்த நிலைமை குறித்து அவதானத்துடன் இருக்க வேண்டும் என்றும் காலநிலை அவதான நிலையம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

எனவே பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் உடல் நிலை குறித்து மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com