Thursday, March 7, 2019

இந்திய மண்ணில், கிளிநொச்சி உருத்திரபுர மாணவிகள் சாதனை

கிளிநொச்சி - உருத்திரபுரத்தை சேர்ந்த செல்வி தினகராசா சோபிகா மற்றும் செல்வி நடராசா வினுசா ஆகிய மாணவிகள், தேசிய றோல் போல் அணியில் தெரிவாகி விருது பெற்றுள்ளமை, இலங்கைக்கு மிகப்பெரும் பெருமையை பெற்றுத் தந்துள்ளது.

கடந்த 21.02.2019 தொடக்கம் 24.02.2019 காலப்பகுதியில் இந்தியாவில் இடம்பெற்ற இந்த ஆசிய கிண்ணபோட்டியில் விளையாடி இவர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்த போட்டியில் இலங்கை அணி மூன்றாம் இடத்தை பெற்றதுடன், செல்வி நடராசா வினுசா, சிறந்த பந்து காப்பாளர் என்ற விருதை தட்டிச் சென்றார். இந்த நிலையில், குறித்த இரு மாணவிகளுக்கும் சிறப்பான பயிற்சிகளை வழங்கிய கிளிநொச்சியை சேர்ந்த திரு. விக்ரர் சுவாம்பிள்ளைக்கு, கிளிநொச்சி மாவட்டம் சார்பாக கிளிநொச்சி அரசாங்க அதிபர் திரு சுந்தரம் அருமைநாயகம் தமது பாராட்டுகளை தமது அலுவலகத்தில் வைத்து நேரில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com