Friday, March 8, 2019

குறிஞ்சாக்கேணி பொது நூலகத்தில், போதிய வசதிகள் இல்லை - பொதுமக்கள்

கிண்ணியா பிரதேச சபை நிர்வாகத்திற்கு உட்பட்ட குறிஞ்சாக்கேணி பொதுநூலகம் போதிய வசதிகள் இன்றி செயற்படுவதாக பொது மக்கள் குறை கூறுகிறார்கள். இந்த நூலகம் பழைமை வாய்ந்த கட்டிடத்தில் இயங்கி வருகின்றது.

இந்த ஒத்து நூலகத்தில் மாணவருக்கான பகுதி, உசாத்துணைப் பகுதி, நாளாந்தப் பத்திரிகைப் பகுதி என்ற சகல பிரிவுகளும் ஒரே இடத்தில் இயங்கி வருகின்றன. இதற்கு இடப் பற்றாக்குறையே காரணம் என கருதப்படுகின்றது.

இந்த நிலையில் குறித்த நூலகத்தின் பௌதீக வளங்களை அபிவிருத்தி செய்து, போதியளவு நூல்களை சேர்க்குமாறு, அப்பகுதியிலுள்ள பொது மக்கள் பரவலாக கோரிக்கை விடுக்கிறார்கள்.

இது குறித்து கிண்ணியா பிரதேச சபையின் தலைவர் உள்ளிட்ட சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரியுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com