Friday, March 8, 2019

சர்வதேக மகளிர் தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் பல்வேறு நிகழ்வுகளுக்கு ஏற்பாடு

இன்று சர்வதேச மகளிர் தினமாகும். இந்தத் தினத்தை முன்னிட்டு இலங்கை முழுவதும் பல நிகழ்ச்சிகள் ஏற்பாடாகி உள்ளன. இதன் பிரதான வைபவம் அனுரதாபுரம் சல்காது மைதானத்தில் இடம்பெறும்.

''திறன்மிக்க பெண்மணியும் அழகான உலகமும்'' என்ற தொனிப்பொருளில் தேசிய நிகழ்ச்சி ஏற்பாடாகி உள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி பிரதம அதிதியாக கலந்து கொள்வார். அத்துடன் பிரதமர், மகளிர் அலுவல்கள் அமைச்சர் ஆகியோரும் நிகழ்வில் பங்கேற்பார்கள்.

இதேவேளை கொழும்பு பங்கு பரிவர்த்தனையில் நேற்று விசேட நிகழ்ச்சி ஒன்று இடம்பெற்றது. உலக வங்கிக் குழுமத்தில் அங்கம் வகிக்கும் சர்வதேச நிதி கூட்டுத்தாபனம் கொழும்பு பங்கு பரிவர்த்தனையுடன் சேர்ந்த தொடர்ந்து நான்காவது தடவையாகவும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.

உலக பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இந்த உலகளாவிய முன்முயற்சி முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com