Monday, March 11, 2019

பயங்கரவாத சட்டத்தை சாதாரண சட்ட அந்தஸ்துக்கு மாற்றுவது ஆபத்தானது - எதிர்க்கட்சி தலைவர்

பயங்கரவாத சட்டமொன்றை சாதாரண சட்ட அந்தஸ்துக்கு மாற்றுவது ஆபத்தானது என்று எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ
தெரிவித்துள்ளார். மாத்தறையில் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

1979 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை நடைமுறையிலுள்ள பயங்கரவாத தடைச் சட்டம், பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தினால் மாற்றீடு செய்யப்படவுள்ளதாக அரசாங்கம்அறிவித்துள்ள நிலையில் அவர் மேற்படி தெரிவித்தார். எந்தவொரு அரசியல் கட்சியும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்துக்கு ஆதரவு வழங்கக் கூடாது. பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமொன்றை நாட்டில் அவசரகாலச் சட்டம் இருக்கின்றபோதே பயன்படுத்த முடியும். இவ்வாறிருக்கையில், இச்சட்டத்தை சாதாரண சட்ட அந்தஸ்துக்கு மாற்றுவது ஆபத்தானது. அதையும் மீறி மாற்றும் சந்தர்ப்பத்தில், தற்போது தான் கலந்துகொள்ளும் ஒரு சாதாரண கூட்டமொன்றைக் கூட நடாத்த விடாமல் தடை செய்வதற்கு ஒரு சாதாரண பொலிஸ் அதிகாரிக்கு இயலுமை காணப்படுகின்றது.

இதனால், ஜனநாயகத்துக்கும் , அரசியல் கட்சிகளின் செயற்பாடுகளுக்கும் ஆபத்தான இந்த சட்டத்தை அங்கீகரிப்பதை தவிர்க்கவேண்டும் என்று எதிரிகட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com