Saturday, March 2, 2019

தொடரூந்தில் மோதுண்ட மாணவனும், மாணவியும் ஸ்தலத்திலேயே மரணம் - உடல் துண்டங்களாகின.

நாவலப்பிட்டியில் தொடரூந்தில் மோதுண்டு, பாடசாலை மாணவனும் மாணவியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். தொடரூந்து பாதையில் நடந்து செல்லும் போது, இவர்கள் தொடரூந்தில் மோதுண்டு உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டனர். இந்த சம்பவம் இன்று முற்பகல் வேளையில் இடம் பெற்றதாக, பொலிஸார் தெரிவித்தனர்

குறித்த இரு மாணவர்களுக்கும் முன்பாக பிறிதொரு மாணவி, கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்தியவாறு தொடரூந்துப் பாதையில் நடந்து சென்றுள்ளார். இதன்போது தொடரூந்து அருகில் வருவதை அவதானித்த மாணவர், நடந்து கொண்டிருந்த மாணவியை பாதையிலிருந்து தள்ளிவிட்டு முன்னால் சென்ற மாணவியைக் காப்பாற்ற முயன்ற போது, இவ்விருவரும் தொடரூந்தில் மோதி உயிரிழந்துள்ளனர்.

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி பயணித்த தொடரூந்திலேயே இவர்கள் மோதுண்டுள்ளனர்.

இந்த விபத்தில் 16 வயதான ஹர்ஷ குமார எனும் மாணவனும், 15 வயதான பியூம பாக்யா செவ்வந்தி எனும் மாணவியுமே உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் இம்புல்பிட்டிய மற்றும் தெகித ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் நாவலபிட்டி மாவட்ட நிதீமன்ற நிதவான் சம்பவ
இடத்திற்கு வருகை தந்து, விசாரணைகளை மேற்கொண்டார். அத்துடன் சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரீசோதனைக்காக, சடலங்கள் நாவலபிட்டி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டன.

சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரீசோதனையின் பின்னர், இரு சடலங்களும் உறவினர்களிடம் கையளிக்கபட உள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை, நாவலபிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது











0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com