Saturday, March 2, 2019

ஐஸ் ரக போதைப்பொருளுடன், கஞ்சிபான இம்ரானின் உதவியாளர் கைது

ஐஸ் ரக போதைப்பொருளையும், ஆயுதங்களையும் தம்வசம் வைத்திருந்த ஒருவர், இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு - கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த இவர், அண்மையில் டுபாய் காவல்துறை அதிகாரிகளால் கைதான கஞ்சிபான இம்ரானின் உதவியாளர் என்று, ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

இன்றைய தினம் காவல்துறை அதிரடிப்படையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது, குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடமிருந்து சில மின்சாதன பொருட்களும் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளார்.

48 வயதான குறித்த சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதுடன், இவர் காவல்துறை பொறுப்பதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com