Saturday, March 2, 2019

மலையக கண்டி உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு, இன்றுடன் 204 ஆண்டுகள் பூர்த்தி

மலையக கண்டி உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு, இன்றுடன் 204 வருடங்கள் பூர்த்தியாகின்றன. இலங்கைக்கு சுதந்திரத் தன்மை இழக்கப்பட்ட தினமாக இத் தினம் கருதப்படுகிறது.

1815 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2ஆம் திகதி, கண்டி மகுல் மடுவ என்ற மேடையில் வைத்து, இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட பின்னர், ஆங்கிலேயரின் கொடியை ஏற்றுவதற்கு எதிராக, சங்கைக்குரிய வாரியபொல ஸ்ரீ சுமங்கள தேரர் செயல்பட்ட நிகழ்வும் அன்றைய தினம் இடம்பெற்றது.

இந்த நாட்டின் தேசிய சுதந்திரத்திற்காக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்திற்கு அடிப்படையாக, சங்கைக்குரிய வாரியபொல ஸ்ரீ சுமங்கள தேரரின் மேற்படி எதிர்ப்பு காணப்பட்டது. இது இலங்கை வரலாற்றில் ஓர் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com