Monday, March 11, 2019

மஹிந்த ராஜபக்ஷவை எந்த அடிப்படையில் ஜனாதிபதி வேட்பாளராக கொண்டுவர யோசிக்கிறார்கள் - டிலான் பெரேரா

எவராக இருந்தாலும் ஜனாதிபதி வேட்பாளர் மக்களின் நன்மதிப்பைப் பெற்றவராக இருக்க வேண்டும் என, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

ஸ்ரீ ல.சு.க.யின் பொதுக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில்அவர் இவ்வாறு கூறினார். ஜனாதிபதித் தேர்தலை வெற்றி கொள்ள மஹிந்த ராஜபக்ஷவையும், மைத்திரிபால சிறிசேனவையும் இணைத்துக் கொண்டு செல்லும் வேலைத்திட்டமொன்றே அவசியமானது. சிலர் மஹிந்த ராஜபக்ஷவையே ஜனாதிபதி வேட்பாளராக கொண்டுவருவதாக கூறிவருகின்றனர். இப்படி கூறுகின்றவர்கள் எந்த அடிப்படையில் இப்படி கூறுகிறார்கள் என்று எனக்கு தெரியவேயில்லை.

எனக்கு தெரிந்த சட்டத்தின்படி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது எனவும் டிலான் பெரேரா குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com