Monday, March 11, 2019

எரிபொருட்களுக்கான புதிய விலைகள் இன்று அறிவிக்கப்படும் - நிதி அமைச்சு

எரிபொருட்களுக்கான புதிய விலைகள் இன்று அறிவிக்கப்படவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. உலக சந்தையில் நிலவும் எரிபொருள் விலைகளுக்கேற்ப புதிய விலைகள் ஒவ்வொரு மாதமும் 10ஆம் திகதி நிர்ணயிக்கப்படும். எனினும், நேற்று விடுமுறை நாள் என்ற காரணத்தினால், இன்றைய தினம் எரிபொருள் விலை சூத்திரம் நடைபெறவுள்ளதாக நிதி அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

கடந்த மாதம் 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 6 ரூபாவாலும், டீசல் லீற்றர் ஒன்றின் விலை 4 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதனிடையே, உலக சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய்யின் விலை 66 டொலர்களாக அதிகரித்துள்ளதாக அமைச்சு வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன. இதன்படி, இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com